ஐபிஎல்: அரையிறுதியில் ஆடப்போகும் அணிகள்!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – 07.10.2021
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

வியாழக்கிழமை அன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் துபாயில் சென்னை அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் சென்னை அணியை மட்டையாடச் சொன்னது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். டியூ பிளேசிஸ் (72 ரன்) தவிர மீதமுள்ள சென்னை அணி வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டானார்கள்.

இருபது ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து விளையாட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், அதன் தலைவருமான கே.எல். ராகுல் 42 பந்துகளில் 98 ரன் எடுத்து தனது அணியை 13 ஓவரில் நான்கு விக்கட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுக்கவைத்து ஒரு பிரமாதமான வெற்றியைப் பெறவைத்தார்.

இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே ஷார்ஜாவில் நடந்தது. பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் கொல்கொத்தா அணியை ஆடச்சொன்னது.

கொல்கொத்தா அணியின் எல்லா பேட்ஸ்மென்களும் தங்களது பொறுப்புணர்ந்து ஆடினர். சுப்மன் கில் (56), வெங்கடேஷ் ஐயர் (38) ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் குறைவான ரன் எடுத்தாலும் ரன் ரேட்டை அதிகப்படுத்தினர்.

இறுதியில் கொல்கொத்தா அணி இருபது ஓவர் முடிவில் நான்கு விக்கட் இழப்பிற்கு 171 ரன் கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி முதல் 6 ஓவருக்குள் நாலு விக்கட் இழந்தது. ராகுல் திவாத்தியா (44) ஷிவம் துபே (18) இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தனர். அந்த அணி 16.1 ஓவரில் 85 ரன் மட்டுமே எடுத்து தொல்வியடைந்தது.

பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் இனி அடுத்த சுற்றுக்கு போக இயலாது, நாளை மும்பைக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அனிக்கும் நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி 171 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வெல்ல வேண்டும்.

இதுவும் நடக்கவியலாத காரியம். எனவே அரையிறுதியில் ஆடப்போகும் அணிகள் டெல்லி, சென்னை, பெங்களூர், கொல்கொத்தா அணிகள் என்றே நாம் முடிவுசெய்யலாம். இருப்பினும் நாளை நடக்கவிருக்கும் ஆட்டத்தையும் பார்க்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories