ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த ‘நல்ல’ அரசியல்வாதி!

rosaiya - 2026

ஒன்றிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கொணிஜேடி ரோசய்யா காலமானார். பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் ஆந்திரா முதல்வர் ரோசய்யாவுக்கு (88) இன்று காலை பல்ஸ் குறைந்து விட்டதால் குடும்பத்தினர் அவரை ஹைதராபாதில் உள்ள ஸ்டார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. காலை எட்டு இருபது மணிக்கு ரோசய்யா காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அரசியலில் சிறந்த அனுபவமுள்ள ரோசய்யா 1933 ஜூலை 4-ஆம் தேதி குண்டூர் மாவட்டம் வேமூரில் பிறந்தார். குண்டூர் இந்து கலாசாலையில் காமர்ஸ் படித்தார். 1968ல் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரோசையா பிரமுக சுதந்திர போராட்ட வீரர், தலைவர் என் ஜி ரங்காவின் சீடர் நிடுப்ரோலு வில் அரசியல் பாடம் கற்றவர்.

காங்கிரஸ் கட்சி மூலம் 1968 1974 1980 களில் சட்டசபை அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் முதலமைச்சர்கள் அனைவரிடமும் பல முக்கியமான துறைகளில் பொறுப்பேற்று பணிபுரிந்தார். 2004 – 2009 காலகட்டத்தில் 12வது சட்டசபைக்கு சீரால அசெம்பிளி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 தேர்தலில் நேரடியாகத் போட்டியிடாமல் எம்எல்சி ஆக நீடித்தார்.

ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தில் மிக நீண்ட காலம் பொருளாதார நிதி அமைச்சராக பணிபுரிந்தார். 2009 -10 பட்ஜெட்டோடு சேர்த்து மொத்தம் 15 முறை மாநில பட்ஜெட்டை தயாரித்து அளித்த பெருமை இவருக்கு உண்டு. இதில் இறுதி ஏழுமுறை வரிசையாக பட்ஜெட் அளித்தது சிறப்பு. பட்ஜெட் தயாரிப்பதில் மிகச்சிறந்த அனுபவம் உள்ளவராக
ரோசய்யாவுக்கு பெயருண்டு.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததால் 2009 செப்டம்பர் 3 ரோசய்யா முதல் அமைச்சராக பதவி ஏற்றார். 14 மாதங்கள் பதவியில் இருந்த பிறகு 2010 நவம்பர் 24ஆம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். 2011 ஆகஸ்ட் 31 தமிழ்நாடு மாநில கவர்னராக பொறுப்பேற்றார். 2016 ஆகஸ்ட் 30 வரை சேவை அளித்தார்

ரோசய்யா அமைதியும் பொறுமையும் கொண்டவராக அரசியலில் தனக்கென்று தனி வழி காட்டியவர் என்ற தெலங்காணா முதல்வர் கேசிஆர் நினைவு கூர்ந்தார். ரோசய்யாவின் குடும்பத்தாருக்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

ரோசய்யா காலமான செய்தி தன்னை மிகவும் பாதித்ததாக ஆந்திர முதல்வர் ஜெகன் குறிப்பிட்டார். ஒன்றிணைந்த ஆந்திர முதல்வராக, நிதியமைச்சராக , சட்டசபை அங்கத்தினராக மிக நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல பதவிகளை அலங்கரித்தார். அவருடைய மரணம் இரு தெலுங்கு மாநிலங்களுக்கு தீராத நஷ்டம் என்று ஜெகன் குறிப்பிட்டார். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக விவரித்தார் .

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

ரோசையா குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் அபிமானிகளுக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு இரங்கல் தெரிவித்தார்.

“மக்கள் சேவையில் ரோசய்யா ஒரு மிகப்பெரும் தலைவர். விழுமியங்களையும் சம்பிரதாயங்களையும் காப்பாற்றுவதில் ரிஷி போன்றவர். ரோசய்யாவின் மரணத்தால் அரசியலில் ஒரு சகாப்தம் முடிந்தது. விவாதங்களில் ஈடுபடாமல் களங்கம் அற்றவராக பெயர் பெற்றவர்” என்று சினிமா நடிகர் சிரஞ்சீவி குறிப்பிட்டார்.

“ரோசய்யா மரணம் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது. விஷாகா ஸ்ரீசாரதா பீடத்தோடு அவருக்கு மிகவும் ஆழ்ந்த தொடர்பு உள்ளது. ஆன்மீகத்திற்கு ரோசையா மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர். ஆரோக்கியமான அரசியலுக்காக அவர் பாடுபட்டார். ரோசய்யாவின் அரசியல் வரப்போகும் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாகும்” என்று விசாகா ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி தெரிவித்தார்.

“ஒன்றிணைந்த ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் கொணிஜேடி ரோசய்யா மரணமடைந்த செய்தியை அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர் எனக்கு நீண்ட கால நண்பர். அறிவு நிறைந்த அவருடைய அனுபவம் முக்கியமான நேரங்களில் மாநிலத்திற்கு உதவியுள்ளது. பொறுமையும் திறமையும் ஒன்றிணைந்த நல்ல மனிதராக அவர் அனைவரின் அன்பையும் பெற்றவர். அவருடைய ஆத்மாவுக்கு அமைதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறேன்” என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

“ரோசய்யாவும் நானும் ஒரே சமயத்தில் முதல்வர்களாக பணிபுரிந்தோம். தமிழ்நாடு கவர்னராக அவர் பணிபுரிந்த போது அவரோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவருடைய சேவைகள் மறக்கமுடியாதவை. அவருடைய குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories