கேரள சட்டப்பேரவை வரலாற்றில் கருப்பு தினம்: உம்மன் சாண்டி

Published:

கேரள சட்டப்பேரவை வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். கேரள சட்டசபையில் நிதியமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டங்களை இன்று நடத்தின. இதனால் அடிதடி ரகளை ஏற்பட்டு, சபையே போர்க்களம் போல் காட்சியளித்தது. இத்தகைய ஒரு நிகழ்வு ஒரு கறை என்று கருத்து தெரிவித்துள்ள உம்மன் சாண்டி, கேரள சட்டசபை வரலாற்றில் இன்று கருப்பு தினம். சட்டசபைக்குள் எதிர்பாராமல் நடந்த சம்பவங்கள் வேதனையை தருகிறது. சபையை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் இவ்வாறு போராடுவது மன்னிக்க முடியாத குற்றம். போராட்டக்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். kerala-assembly   [su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”7″ tax_term=”212″ tax_operator=”0″ order=”desc”]

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img