புதுதில்லி ரயிலில் பயணச் சீட்டு பெற்ற பின்னர் பணம் செலுத்தும் புதிய வசதி குறிப்பிட்ட இணையதளம் மூலம் ஜன.1 அன்று தொடக்கப்பட்டதாக அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். மத்திய ரயில்வே துறையின், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இ-டிக்கெட் சேவைக்கு, பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் புதிய திட்டத்தை 01.01.2015 அன்று முன்னோடி திட்டமாக அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் கீழ்வரும் இணைய தளங்கள் மூலம் பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் வசதி அல்லது இணைய வழி பணம் செலுத்தும் வசதியை தேர்ந்தெடுக்கலாம். i. www.bookmytrain.com ii. Bookmytrain App on Android platform. iii. Bookmytrain App on Windows platform. iv. Bookmytrain App on BlackBerry platform. v. Bookmytrain App on iOS platform. பயணம் தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தங்களது பயண சீட்டை பதிவு செய்யலாம். பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் வேகமாக பெருகிவரும் கருத்துகளை வைத்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா மக்களவையில் இன்று தெரிவித்தார்.
ரயில் பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் புதிய திட்டம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா
Popular Categories


