பாக்தாத்: ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து ராணுவம் மீட்டெடுத்த திக்ரித் பகுதியில், சதாம் உசேனின் கல்லறை முற்றிலும் சேதம் அடைந்துவிட்டதாக ராணுவம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஈராக்கின் திக்ரித் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதனை மீட்க ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் போரிட்டது. அதைத் தொடர்ந்து சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அவரது உடலை அதில் இருந்து தோண்டி, வேறு இடத்தில் அடக்கம் செய்தனர். அங்கே கல்லறை மட்டும் இருந்தது. இந்நிலையில், அங்கே சண்டை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து வெடிகுண்டுத் தாக்குதலில் சதாம் உசேன் கல்லறை முற்றிலும் அழிந்து சேதம் அடைந்தது. தற்போது அங்கு கான்கிரீட் கூரைகளின் இடிபாடுகள் மட்டுமே கொட்டிக் கிடக்கின்றன. தற்போது ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பிடியில் இருந்து திக்ரித் பகுதியை மீட்டு விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.
ஈராக் திக்ரித்தில் சதாம் கல்லறை சண்டையில் சேதம்
Popular Categories


