கோலாலம்பூர்: மலேசியாவில் பயிற்சியின் போது 2 விமானங்கள் நடுவானில் வெடித்துச் சிதறின. அதில் இருந்த 4 விமானிகளும் பாராசூட் உதவியுடன் உடனே குதித்துத் தப்பினர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமானக் கண்காட்சி நாளை துவங்கி வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் இந்தோனேஷியா உள்பட பல்வேறு நாட்டு விமானங்களும் கப்பல்களும் பங்கேற்கின்றன. இந்நிலையில், லங்காவி தீவில் நேற்று மாலை இந்தோனேஷியாவைச் சேர்ந்த 2 அதிநவீன விமானங்கள் நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது ஒரு விமானத்தின் இறக்கை மற்றொரு விமானத்தின் இறக்கையில் உரசியதால், இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்துச் சிதறின. இந்த 2 விமானங்களிலும் இருந்த 4 விமானிகளும் பாராசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினர். விமானங்களில் இருந்து வெடித்துச் சிதறிய பாகங்கள் அருகில் இருந்த வீடுகள் மற்றும் கார்களில் பட்டு எரிந்ததால், அவையும் தீப்பிடித்து சேதமடைந்தன. பாராசூட் மூலம் தரையில் குதித்து படுகாயம் அடைந்த 4 விமானிகளும் பின்னர் லங்காவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஹிஸ்சாமுதீன் ஹுசைன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். (ஏபிசி நியூஸ்) https://www.youtube.com/watch?v=xI_hvGMZYG4
To Read this news article in other Bharathiya Languages
மலேசிய விமானக் கண்காட்சியில் வெடித்துச் சிதறிய 2 விமானங்கள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari