மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை: ஐஏஎஸ் அதிகாரி மர்ம மரணம்

ravi-karnataka-iasபெங்களூரு: பெங்களூரு கோரமங்களாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி (36) நேற்று மாலை அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்தார். கோலார் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய அவர் தற்போது வணிக வரித் துறையில் கூடுதல் ஆணையராக பெங்களூரில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த மடிவாளா போலீஸார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது வீட்டைப் பார்வையிட்ட மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி, கூடுதல் ஆணையர் ஆலோக்குமார் உள்ளிட்டோர் இது குறித்து விசாரணை நடத்தினர். ரவியின் மர்மமான மரணம் குறித்து மடிவாளா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 36 வயதான அவர் 2009ம் வருட ஐஏஎஸ் பேட்ச் அதிகாரி. அப்போது வணிக வரித்துறை கூடுதல் பொறுப்பில் சேர்ந்தார். தற்போது, கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றும் ரவி, முன்னர் மங்களூரில் பணியாற்றியபோது, மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர். அவருக்கு மணல் கொள்ளையர்கள் மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில், தனது வீட்டில் மதிய உணவுக்குப் பின்னர் தூக்கில் தொங்கியுள்ளார் ரவி. ரவியின் மனைவி வந்து பார்த்தபோது, சிறு துணியில் கழுத்தை இறுக்கி அவர் தூக்கில் தொங்கி இறந்துள்ளது தெரியவந்ததாக விசாரணை நடத்திய எம்.என்.ரெட்டி தெரிவித்தார். இதனிடையே, நேர்மையான அதிகாரியான ரவியின் மரணத்தின் பின்னே உள்ள உண்மையைக் கண்டறியுமாறு கோரி, கோலார் மாவட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டமும் கடையடைப்பும் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories