தில்லி: தில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 70 காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட்டை தொகையைப் பறிகொடுத்துள்ளனர். தில்லியில் மூன்று முறை தொடர்ந்து அதாவது 15 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, இந்த சட்டசபைத் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இது ஒருபுறம் இருக்க அந்தக் கட்சியின் 70 வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறுகிற அளவுக்கு கவுரவமான எண்ணிக்கையில் ஓட்டுகளைப் பெற்றனர். 63 வேட்பாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.
Popular Categories