கொரோனாவால் பத்திரிகையாளர் மரணம்; முதல்வர் இரங்கல்!

hyderabad jounalist manoj
hyderabad jounalist manoj
  • கரோனாவால் ஹைதராபாத் பத்திரிக்கையாளர் மரணம்.
  • முதலமைச்சர் கேசிஆர் இரங்கல்.
  • பிரமுகர்கள் ஜெர்னலிஸ்ட் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்து உள்ளார்கள்.

இருந்தாற் போலிருந்து மனோஜ் காலமானதை குடும்பத்தினரும் அவர் பணிபுரியும் டிவி சேனல் ஊழியர்களும் ஏற்றுக் கொள்ள இயலாமல் பரிதவிக்கின்றனர்.

ஹைதராபாத் நகரத்தில் கரோனா வைரஸ் சிகிச்சை பெற்று வந்த ஒரு ஜர்னலிஸ்ட் மரணமடைந்துள்ளார். கொரோனாவால் மாநிலத்தில் ஒரு ஜர்னலிஸ்ட் மரணமடைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்னலிஸ்ட் மனோஜுக்கு ஒரு நாள் முன்புதான் கரோனா பரவியது கண்டறியப்பட்டது. வைரசின் அறிகுறிகள் அவரிடம் தெரிந்ததால் மனோஜை காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். சிகிச்சை அளித்து வந்தார்கள். அவருடைய உடல்நலம் ஆபத்தானதாகி ஞாயிறன்று மரணித்தார்.

மாதன்னபேட்டையை சேர்ந்த மனோஜ் பல டிவி சேனல்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது டிவி5 சேனலில் கிரைம் ரிப்போர்ட்டராக பொறுப்பு நிர்வகித்து வந்தார். பல பிரமுகர்கள் மனோஜ் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்து உள்ளார்கள்.

இருந்தாற் போலிருந்து மனோஜ் கொரோனாவால் மரணமடைந்ததை குடும்பத்தினரும் அவர் பணிசெய்த டிவி சேனல் ஊழியர்களும் ஏற்றுக் கொள்ள இயலாமல் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். தெலங்காணாவில் சனிக்கிழமை ஒரு நாளிலேயே 206 பாசிட்டிவ் கேசுகள் பதிவாகியுள்ளன. மேலும் 10 பேர் இறந்து போனார்கள்.

hyderabad jounalist manoj
hyderabad jounalist manoj

மனோஜ் மரணம் குறித்து முதலமைச்சர் கேசிஆர் இரங்கல் தெரிவித்தார். அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

ஜேர்னலிஸ்ட் மனோஜ்குமார் கொரோனாவால் மரணமடைந்தது தன்னை வருத்தத்தில் ஆழ்த்தியதாக அமைச்சர் ஹரீஷ் ராவு கூறினார். இந்த நேரத்தில் பணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் பொறுமையும் மிகவும் தேவை என்றார். அனைவரும் கவனத்தோடு வேலையில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தெலங்காணா பிஜேபி தலைவர் பண்டி சஞ்சை மனோஜ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.

கரோனா பாசிட்டிவ் என்று தெரிந்த மறு நாளே மனோஜ் மரணமடைந்தார். covid-19 நோயில் சிக்கிய ஜர்னலிஸ்ட் அறிகுறிகள் கண்டறிந்த ஒரே நாளிலேயே மரணமடைந்தது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கரோனா வாரியர்களாக டாக்டர்கள் போலீசார் தொழிலதிபர்கள் தொழிலாளர்களின் கடமை மிகவும் உன்னதமானது. அதேபோல் மீடியாவின் பங்கும் மிகவும் முக்கியமானது.

இந்த வரிசையில் இளைஞரான ஒரு ஜர்னலிஸ்ட் கோவிட் 19 நோயில் சிக்கி கண் மூடினார். மனோஜ் குமார் tv5 மீடியாவில் க்ரைம் ரிப்போர்ட் ஆக பணிபுரிந்து வந்தார். இதன் பின்னணியில் அவருக்கு கரோனா வைரஸ் பரவியது. ஆனால் covid-19 பாசிட்டிவாக தெரிந்த மறுநாளே ஜேர்னலிஸ்ட் மனோஜ்குமார் இறந்தது வருத்தமளிக்கிறது.

cm condoles manoj
cm condoles manoj

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒன்பதரை மணிக்கு மனோஜ் இறந்துபோனார் என்று காந்தி மருத்துவமனை சூப்பரின்டென்டன்ட் டாக்டர் ராஜாராவு தெரிவித்தார். ரிப்போர்ட்டர் மனோஜ் குமாருக்கு மயுஸ்தீனியா கிரேவிஸ் என்ற நுரையீரல் சம்பந்தமான நோய் இருப்பதாக தெரிவித்தார்.

அவருக்கு சென்ற வருடம்தான் திருமணம் ஆனது. மனோஜ்குமாரின் மனைவி தற்போது கர்ப்பிணி என்று தெரிகிறது.

சக ஜர்னலிஸ்டுகள் அன்போடு லட்டு என்று மனோஜை அழைப்பார்கள். அவர் இறந்ததை சக ஜர்னலிஸ்ட்கள் ஏற்க இயலாமல் பரிதவிக்கின்றனர். மனோஜின் இறப்பு குறித்து journalist’s சங்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன. தெலங்காணாவில் கரோனாவால் மரணித்த முதல் ஜேர்னலிஸ்ட் மனோஜ்குமார் என்று தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories