அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவு

Published:

புதுதில்லி: அந்தமான் தீவுகளின் வடக்குப் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img