December 6, 2025, 5:53 AM
24.9 C
Chennai

நீரவ் மோடியின் மோசடி கண்டுபிடிக்கப் பட்டது எப்படி? : வங்கி அதிகாரி விளக்கம்

புது தில்லி:

இந்தியாவை உலுக்கியெடுக்கும் மிகப் பெரும் கடன் ஏய்ப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார். அவர் தப்பியோடிய பிறகே அவர் கண்காணிக்கப்படும் நபராக சிபிஐ அறிவித்துள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.

வியாழக்கிழமை நேற்று நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி (வயது 46), பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்தவர். இவர் நியூயார்க், லண்டன், பெய்ஜிங், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் குறித்து அண்மையில் செய்தி வெளியிட்டிருந்த ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இவர் பெயரையும் பட்டியல் இட்டிருந்தது.

இந்நிலையில் நீரவ், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் ஒரு புகாரைப் பதிவு செய்தது. இந்தப் புகாரும் கூட கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அளிக்கப் பட்டிருந்தது. அதில், நீரவ், அவரது குடும்பத்தினர், அவரது பங்குதாரர்கள் ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரின் உதவியுடன் பண ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

நீரவ் மோடியின் மோசடி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாண் இயக்குநர் சுனில் மேத்தா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் விளக்கினார்.

நீரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் இம்மூவரும் மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை ஒன்றில் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் 2011ஆம் ஆண்டில் போலியாக உறுதிமொழிச் சான்றுகளைப் பெற்றனர். அந்தச் சான்றுகளை வைத்து யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, அலாகாபாத் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றின் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்து கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உறுதிமொழிச் சான்று அளித்ததற்கான எந்தப் பதிவும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் இல்லை.

இந்நிலையில், கடந்த மாதம் புதிதாக கடன் பெறுவதற்காக, நீரவ் மோடியின் நிறுவனத்தில் இருந்து உறுதிமொழிச் சான்று கோரி விண்ணப்பித்தனர். ஆனால், 2011ல் நீரவ் மோடியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் பணி ஓய்வு பெற்று விட்டதால், புதிதாக வந்த அலுவலர்கள் 100 சதவீத உத்தரவாதத் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் ஏற்கெனவே இதுபோன்று உறுதிமொழிச் சான்றுடன் கடன் வாங்கியதாக அந் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதால், வங்கி அலுவலர்கள் உஷார் ஆயினர். தொடர்ந்து, வங்கியில் உள்ள பழைய ஆவணங்களை ஆய்வு செய்தபோதுதான், இது தொடர்பான எந்த ஆவணமும் வங்கியில் இல்லை என்பது தெரியவந்தது. இதை அடுத்துதான் இந்த மோசடி தெரிய வந்தது. அதன் பின்னரே வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ., அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இந்தத் தகவல்களைக் கூறிய வங்கி மேலாண் இயக்குனர் சுனில் மேதா, நிதி நெருக்கடியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி விரைவில் மீண்டு வரும். முறைகேடு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.

1 COMMENT

  1. மோடி எனும் பெயர் கொண்டதால், எல்லோரிடமும் ஒழுக்க சீலர்களாக நடக்க எதிர்பார்ப்பது நடக்காது.

    Bank Guarantee ஐ வாங்கி, வங்கிப் பணத்தை ஸ்வாஹா பண்ணத் துணிந்தவனுக்கு துணை போன வங்கி அதிகாரிகளுக்கும் உச்ச பட்ச தண்டணையை தர வேண்டும்.

    இப்படி எத்தனை ஊழல் நடந்தாலும், அரசு வங்கி என பெருமையாகப் பேசி இவர்கள் என்ன லாபத்தை குவித்துவிட்டார்கள்?

    ஸ்ரீபாலா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories