மகளின் கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் கொடூர தாய் நிற்க வைத்த அதிர்ச்சி சம்பவம்..

டெல்லியில்,வீட்டு பாடம் செய்யவில்லை என்பதற்காக 1ம் வகுப்பு படிக்கும் தனது மகளின் கை, கால்களை கயிறு ஒன்றால் இறுக கட்டி உச்சி வெயிலில் மொட்டைமாடியில் கொடூர தாய் நிற்க வைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீசார் இச்சம்பவம் குறித்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியின் கராவல் நகரின் துக்மீர்பூர் நகரில் வசித்து வரும் தம்பதி ராஜ்குமார் மற்றும் சப்னா. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன், 5 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், வீட்டு பாடம் செய்யவில்லை என்பதற்காக 1ம் வகுப்பு படிக்கும் தனது மகளின் கை, கால்களை கயிறு ஒன்றால் இறுக கட்டி உச்சி வெயிலில் மொட்டைமாடியில் சப்னா நிற்க வைத்துள்ளார். வெயில் அதிகரித்து, அந்த சிறுமி சுருண்டு படுத்துள்ளது. சற்று நேரம் அழுதுள்ளது. சிறுமியின் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்த சிறுமியின் மாமா சுனில் உள்ளிட்ட உறவினர்கள் ஓடி சென்று பார்த்துள்ளனர். பின்னர் சிறுமியை கீழே கொண்டு வந்தனர். இதுபற்றி சுனில் கூறும்போது, ஒவ்வொரு சிறு விசயத்திற்காகவும் தனது குழந்தைகளை அவர்களின் தாயார், அடித்து வருகிறார். இயற்கையிலேயே அதிக கோபக்கார பெண்மணி. அவர் அடிக்கும்போது நாங்கள் யாராவது தடுக்க சென்றால், அவர்கள் எங்களுடைய குழந்தைகள். அவர்கள் மீது எங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என அந்த தாய் கூறி விடுவார். இதற்கு முன்பு அவர் இப்படி இருந்தது இல்லை. கடந்த 2, 3 ஆண்டுகளாகவே இப்படி நடந்து கொள்கிறார் என கூறியுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுடன் எப்போதும் தகராறில் ஈடுபடும் பழக்கம் உள்ளவர் அவர் என சிறுமியின் அத்தை பூஜா கூறியுள்ளார். சிறுமியிடன் மட்டுமின்றி, மகனிடமும் இதுபோன்று நடந்து கொள்வார். அதனை நாங்கள் தடுக்க சென்றால், கூடுதலாக அவர்களுக்கு அடி கிடைக்கும். அதனால், அவர் என்ன வேண்டுமென்றாலும் கூறி விட்டு போகட்டும் என நாங்கள் விட்டு விடுவோம் என கூறியுள்ளார். இதேபோன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரதீப் கூறும்போது, குழந்தைகளின் அழுகை சத்தம் அந்த வீட்டில் இருந்து எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் கூட, அவரது மகனை ஆடைகள் இன்றி வெற்றுடலுடன் நிற்க வைத்த சம்பவமும் நடந்துள்ளது. இதன்பின்னர், பக்கத்தில் வசிப்பவர்கள் சென்று சிறுவனுக்கு ஆடைகளை கொடுத்தனர் என கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

images 52 - 2026
727170 dfyod - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories