ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி..

images 51 - 2026



குஜராத் மாநிலம் வதோதரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற முண்று சக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் இரண்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், சிதைந்த வண்டியில் இருந்து மேலும் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தானது, டிரக்  கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதில் இந்த சம்பவம் நடந்தேரியது. இதில் இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த ஏழு பேர் வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல் ஆய்வாளர் எஸ்ஆர் வெகாரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மோதலின் தாக்கம் மிகவும் மேசமாக இருந்ததால் வண்டி ஏறக்குறைய நசுங்கிவிட்டது.  சிதைந்த வாகனத்தில் சிக்கிய பயணிகளை மீட்க தீயணைப்புத் துறை குழு வரவழைக்கப்பட்ட நிலையில், காயம் அடைந்த ஓட்டுநர் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்த பத்து பேரில் பத்து வயது மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும், பெரும்பாலானோர் 40 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து, இது குறித்து முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories