December 10, 2025, 9:46 PM
25.1 C
Chennai

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி..

images 51 - 2025



குஜராத் மாநிலம் வதோதரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற முண்று சக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் இரண்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், சிதைந்த வண்டியில் இருந்து மேலும் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தானது, டிரக்  கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதில் இந்த சம்பவம் நடந்தேரியது. இதில் இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த ஏழு பேர் வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல் ஆய்வாளர் எஸ்ஆர் வெகாரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மோதலின் தாக்கம் மிகவும் மேசமாக இருந்ததால் வண்டி ஏறக்குறைய நசுங்கிவிட்டது.  சிதைந்த வாகனத்தில் சிக்கிய பயணிகளை மீட்க தீயணைப்புத் துறை குழு வரவழைக்கப்பட்ட நிலையில், காயம் அடைந்த ஓட்டுநர் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்த பத்து பேரில் பத்து வயது மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும், பெரும்பாலானோர் 40 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து, இது குறித்து முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...

Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!

It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...

Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!

It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

Entertainment News

Popular Categories