வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா: குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

Published:

புது தில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா வழங்குவதற்காக, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற ப்ரவாசி பாரதிய திவஸ் (பிபிடி) நிகழ்வின் போதான கூட்டத்தில் இதற்கான யோசனை வடிவு முன்வைக்கப்பட்டது. அதன்படி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவை இதற்கான ஒப்புதல் அளித்தது. இதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களின் வெகுநாள் கோரிக்கையான இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதற்கான பி.ஐ.ஓ. அடையாள அட்டை (PIO) மற்றும் வெளிநாட்டுக்கான இந்தியக் குடியுரிமையான ஓ.சி.ஐ. (OCI) அட்டை ஆகிய இரண்டும் ஒன்றாக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு நிறைவேற்றவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்கும் போது இதற்கான திருத்தம் மேற்கொள்ளப்படும். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது நியூயார்க்கில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அதிக பட்சம் 15 ஆண்டு கால விசா மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் அவர்கள் இந்தியா வரும்போது காவல் நிலையங்களுக்குச் சென்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இந்த 2 விதிமுறைகளும் இனி தளர்த்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதன்படி, இந்த விதிமுறைகளை நீக்கி திருத்தப்பட்ட குடியுரிமை அவசரச் சட்டம் கடந்த மாதம் 6-ந் தேதி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இந்த அவசரச் சட்டதுக்கு மாற்றாக குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img