அசாம்-மேகாலயா எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி..

அசாம் – மேகாலயா மாநில எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இரு மாநில எல்லையில் உள்ள ஜைன்டியா மலைப்பகுதியில் உள்ள முக்ரோ என்ற இடத்தில் அசாம் வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேகாலயாவில் 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இண்டர்நெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களும் 884.9 கி.மீ., தூர எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. அதில் சில இடங்கள் குறித்து இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையை தீர்ப்பது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாண்டா சர்மா மற்றும் மேகாலயா முதல்வர் கன்ராட் சர்மா இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது தொடர்பாக கடந்த ஆக., மாதம் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பிரச்னைக்குரிய பகுதிகளில் ஒன்றாக துப்பாக்கிச்சூடு நடந்த இடம் உள்ளது.

அந்த பகுதிகளை மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சிலர் வாகனங்களில் வந்தனர். அப்போது அங்கிருந்த வனத்துறை அதிகாரிகள் வாகனத்தின் டயர்களில் சுட்டனர். அதனால் கோபமடைந்த டிரைவர்கள் அருகில் இருந்த கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

மக்கள் அங்கு குவிந்தனர். இச்சூழ்நிலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். அசாம் வனத்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கன்ராட் சர்மா உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி அளிக்க உத்தரவிட்டதுடன், 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இணைய சேவையை துண்டிக்கவும் கூறியுள்ளார். துப்பாக்கிச்சூடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

gallerye 174604538 3176736 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories