தில்லியில் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் பாதியாகக் குறைப்பு

Published:

தில்லியில் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சார கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பை துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா வெளியிட்டார். முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தில்லியில் போட்டியிட்டபோது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்சாரக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மின்சாரக் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 90 % பேர் பயன் அடைவார்கள்.

Related articles

Recent articles

spot_img