இன்று நாடாளுமன்ற மக்களவையில் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அப்போது அவர், தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றம் இல்லை என்று கூறினார். மேலும், தனிநபர் வருமான வரி விலக்கில் தற்போதைய நிலையே தொடரும் என்று கூறிய அவர், வருமான வரியைத் தாக்கல் செய்யாதவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், வருமான வரி செலுத்தாதவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

