உலக கலாச்சார மையங்களின் வசதி பாதுகாக்கப்படும்: அருண் ஜேட்லி

Published:

புது தில்லி: இந்தியாவின் 25 கலாச்சார பாரம்பரிய மையங்களில் வசதிகள் குறைவாக உள்ளதாகவும் அது மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர்அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். நிதி நிலை அறிக்கை 2015-16 இல் வழங்கிய நிதி அமைச்சர் பாரம்பரிய புராதன மையங்களை பராமரிப்பது, வாகன நிறுத்தம் வசதி, மாற்று திறனாளிகளுக்கான வசதி, விளக்கம் அளிக்கும் மையங்கள் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு, கழிப்பறை, விளக்குகள் அமைப்பது, கலாச்சார மையங்களை சுற்றி உள்ள சமுதாயத்தினருக்கு பலன் அளிக்கும் நடவடிக்கைகள் போன்ற வசதிகள் செய்து தரப்படும், கீழ்வரும் கலாச்சார பாரம்பரிய மையங்களில் செயல்பாடுகளை துவக்க அமைச்சர் திட்டமிட்டுள்ளார். 1. சர்ச்சுகள் மற்றும், கான்வெண்ட் – கோவா. 2. ஹம்பி, – கர்நாடகா. 3. கும்பல்கார் மற்றும் இதர மலை சார்ந்த கோட்டைகள் – ராஜஸ்தான். 4. ராணி கீ வவ், பதான் – குஜராத். 5. லே அரண்மனை, லடாக் – ஜம்மு காஷ்மிர். 6. வாரணாசி, கோவில் நகரம், – உத்திர பிரதேசம். 7. ஜாலியன்வாலா பாக், அமிர்தரசாஸ் – பஞ்சாப். 8. குதூப் ஷாஹி சமாதி, ஹதராபாத் – தெலுங்கானா. நாடுகளின் இருந்து வருகைதரும் பயணிகளுக்கு. விசா வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதற்கு முன்பு 43 நாடுகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Related articles

Recent articles

spot_img