புது தில்லி:: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2015-2016, ஏழை மக்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் முழு பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து தனது கருத்தைத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. ஏழை மக்களுக்கு எதிரான பட்ஜெட் இது. பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள்தான் அதிகம் உள்ளது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஏதுமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்: சோனியா காந்தி
Popular Categories


