WC 2023: தொடரும் வெற்றி ‘ராசி’: பொளந்து கட்டிய ரோஹித் சர்மா!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
பத்தாம் நாள்
இந்தியா vs பாகிஸ்தான்
அகமதாபாத் – 14.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பாகிஸ்தான் அணியை (42.5 ஓவரில் 191 ஆல் அவுட், பாபர் அசம் 50, ரிஸ்வான் 49, இமாம் உல் ஹக் 36, பும்ரா 2/19, சிராஜ் 2/50, ஹார்திக் 2/34, குல்தீப் 2/35, ஜதேஜா 2/38) இந்திய அணி (30.3 ஓவரில் 192/3, ரோஹித் ஷர்மா 86, ஷ்ரேயாஸ் ஐயர் 53, ஷாஹீன் அஃப்ரிடி 2/36, ஹசன் அலி 1/34) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதுவரையில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒரு முறை கூட இந்திய அணியை வென்றிராத பாகிஸ்தான் அணி முதலில் மட்டையாட வந்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 29.4 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்திருந்தது. அதன் பின்னர் அடுத்த 13 ஓவரில் 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.

அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடினார். 6 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 86 ரன் எடுத்து அவர் ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தில் முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 79 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியாக 30.3 ஓவரில் இந்திய அணி வெற்றியை எட்டியது. பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 100 ஓவருக்குப் பதிலாக 74 ஓவர்களில் மேட்ச் முடிந்துவிட்டது. இந்திய அணிக்கு நல்ல ரன்ரேட்டும் கிடைத்தது.

உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில், இந்திய பாகிஸ்தான் – அணிகள் மோதும் போட்டி என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் போட்டியிலும் இந்திய அணியே வென்று, பாகிஸ்தானுடன் தோல்வியை சந்திக்காத ராசியை தொடரச் செய்துவிட்டது.

இந்த வெற்றியுடன் இந்திய அணி 6 புள்ளிகளுடனும் சிறப்பான ரன் ரேட்டுடனும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெல்லியில் ஆட்டம் நடைபெறுகிறது.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories