WC 2023: தொடரும் வெற்றி ‘ராசி’: பொளந்து கட்டிய ரோஹித் சர்மா!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
பத்தாம் நாள்
இந்தியா vs பாகிஸ்தான்
அகமதாபாத் – 14.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பாகிஸ்தான் அணியை (42.5 ஓவரில் 191 ஆல் அவுட், பாபர் அசம் 50, ரிஸ்வான் 49, இமாம் உல் ஹக் 36, பும்ரா 2/19, சிராஜ் 2/50, ஹார்திக் 2/34, குல்தீப் 2/35, ஜதேஜா 2/38) இந்திய அணி (30.3 ஓவரில் 192/3, ரோஹித் ஷர்மா 86, ஷ்ரேயாஸ் ஐயர் 53, ஷாஹீன் அஃப்ரிடி 2/36, ஹசன் அலி 1/34) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதுவரையில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒரு முறை கூட இந்திய அணியை வென்றிராத பாகிஸ்தான் அணி முதலில் மட்டையாட வந்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 29.4 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்திருந்தது. அதன் பின்னர் அடுத்த 13 ஓவரில் 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.

அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடினார். 6 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 86 ரன் எடுத்து அவர் ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தில் முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 79 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியாக 30.3 ஓவரில் இந்திய அணி வெற்றியை எட்டியது. பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 100 ஓவருக்குப் பதிலாக 74 ஓவர்களில் மேட்ச் முடிந்துவிட்டது. இந்திய அணிக்கு நல்ல ரன்ரேட்டும் கிடைத்தது.

உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில், இந்திய பாகிஸ்தான் – அணிகள் மோதும் போட்டி என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் போட்டியிலும் இந்திய அணியே வென்று, பாகிஸ்தானுடன் தோல்வியை சந்திக்காத ராசியை தொடரச் செய்துவிட்டது.

இந்த வெற்றியுடன் இந்திய அணி 6 புள்ளிகளுடனும் சிறப்பான ரன் ரேட்டுடனும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெல்லியில் ஆட்டம் நடைபெறுகிறது.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories