‘நிர்பயா’ குற்றவாளியின் பேட்டி: திகார் சிறை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கிறது உள்துறை

delhi-student-nirbhaya புது தில்லி: கடந்த 2012ம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ துணை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியிடம் ஆவணப் படத்துக்காக பேட்டி எடுக்கப் பட்ட விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், திகார் சிறை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாத்கார சம்பவ குற்றவாளி முகேஷ் சிங்கிடம் பிரிட்டிஷ் ஆவணப் படத் தயாரிப்பாளர் லெஸ்லீ உட்வின் பேட்டி ஒன்றை எடுத்தார். அதில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் இன்று ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அறிக்கை தருமாறு திகார் சிறைத் துறையிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. திகார் சிறை நிர்வாகம், இந்தப் பேட்டி விவகாரத்தில், சரியான நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளதா, குற்றவாளியிடம் பேட்டி காண்பதற்குத் தேவையான அனுமதியை முறையாகப் பெற்றிருந்தாரா என்பது குறித்தெல்லாம் உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிருப்தி அடைந்துள்ளார். இதனிடையே, அந்த ஆவணப் படத் தயாரிப்பாளர், தான் பதிவு செய்த பேட்டியினை சிறைத் துறை அதிகாரிகளிடம் போட்டுக் காட்டியதாகவும் அதன் பின்னரே வெளியில் அதனைத் தெரிவித்துள்ளார் என்றும் சிறைத் துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் முறையான புகார் பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் திகார் சிறை நிர்வாகத்திடம் எதிர்பார்க்கிறதாம். வரும் மார்ச் 8ஆம் தேதி இந்த ஆவணப் படம் பிரிட்டனில் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. தொடர்புடைய செய்தி: [su_permalink id=”3651″ target=”blank”][/su_permalink]  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories