வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியதற்கு தென்கொரியாவும் ஜப்பானும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறைந்த தொலைவு சென்று இலக்கினைத் தாக்கும் இரு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல் என தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சுமார் 490 கிமீ. தொலைவு வரை உள்ள இலக்கைத் தாக்கும் வலிமை பெற்ற இரண்டு ஏவுகணைகளை நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள நம்போ-வில் இருந்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கில் உள்ள கடல்பகுதியை நோக்கி ஏவியது வடகொரியா. இந்த ஏவுகணை சோதனை குறித்து குறிப்பிட்ட தென் கொரிய ராணுவம், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் தென்கொரியப் படைகளின் கூட்டுப் பயிற்சி தொடங்கி உள்ளதை அடுத்து இந்த சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக தென்கொரிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே கூட்டுப்பயிற்சி நடத்தப்படுவதாக தென்கொரியா விளக்கம் கொடுத்துள்ள போதிலும், இதனை தங்கள் நாட்டிற்கு விடப்படும் அச்சுறுத்தலாக வடகொரியா கருதுகிறது. இதனால் அமெரிக்க கூட்டுப் பயிற்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது வடகொரியா. அதை ஒரு புகாராக முன்வைத்து, இது போன்ற ஏவுகணைச் சோதனைகளை நடத்துவதையும் வடகொரியா வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனிடையே இங்குள்ள நிலைமையை நன்கு கண்காணித்து வருவதாகவும், தங்களை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கையை வடகொரியா தொடரும் என்றால் தகுந்த பதிலடி கொடுக்க தங்கள் நாட்டு ராணுவம் தயாராக உள்ளதாகவும் தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
அரசியல்
நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
அரசியல்
‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்!
இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
நெல்லை
தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
அரசியல்
நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
அரசியல்
‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்!
இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
நெல்லை
தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
ஆன்மிகக் கட்டுரைகள்
பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!
பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.
சற்றுமுன்
நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
விளையாட்டு
ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!
புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

