December 6, 2025, 6:56 PM
26.8 C
Chennai

WC 2023: புள்ளிப் பட்டியலில் கணக்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியா!

world cup cricket 2023 - 2025
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
பனிரெண்டாம் நாள்
இலங்கை vs ஆஸ்திரேலியா
லக்னோ – 16.10.2023


முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இலங்கை அணியை (43.3 ஓவரில் 209, பதுன் நிசாங்கா 61, குசல் பெரேரா 78, சரித் அசலங்கா 25, ஆடம் சாம்பா 4/47, மிட்சல் ஸ்டார்க் 2/43, பேட் கம்மின்ஸ் 2/32, மேக்ஸ்வெல் 1/36)  ஆஸ்திரேலிய அணி  (35.2 ஓவரில் 215/5, மிட்சல் மார்ஷ் 52, லபுசேன் 40, இங்கிலிஷ் 58, மேக்ஸ்வெல் 38*, மதுஷங்கா 3/38) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் 125 ரன் அடித்த பின்னர் இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவின் ஆட்டமாக மாறியது. அவர்கள் அடுத்த 84 ரன்களுக்கு அனைத்து  இலங்கை விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், மட்டையாளர்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவின் எதிர்க்க முடியாத பந்துவீச்சில் தங்கள் விக்கட்டுகளை இழந்தனர்.

முதல் விக்கட்டுக்கான பார்ட்னர்ஷிப் தவிர 32 ரன் கொண்ட இரண்டாவது பார்ட்னர்ஷிப்புக்குப் பின்னால் இலங்கை அணியின் சிறந்த ஸ்டாண்ட் 12 ரன்களாக இருந்தது.

ஆஸ்திரேலிய அணிக்காக, ஆடம் சம்பா 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார். இலங்கையின் புதிய கேப்டனும், சமீபத்திய மாதங்களில் சிறந்த பேட்டருமான குசல் மெண்டிஸின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார்.

தில்ஷான் மதுஷங்கா முதலில் ஒரு மெய்டன் ஓவரை  வீசினார், பின்னர் அடுத்த ஓவர் இரட்டை விக்கெட் மைடன்-ஆக வீசினார். ஆனால் மறுமுனையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் எடுத்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார். பந்து வீச்சில் ஸ்விங் குறைந்தபோது, மதுஷங்காவின் பந்துகளையும் அடிக்க ஆரம்பித்தனர். மேலும் வேறு எந்த பந்துவீச்சாளரும் அவருக்கு இணையாகச் சிறப்பாக பந்து வீசவில்லை.

ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுசேன் ஜோடி 77 ரன்கள் சேர்த்தது. பின்னர் க்ளென் மேக்ஸ்வெல் உள்ளே வந்து தனக்குப் பிடித்த இலங்கை அணிக்கு எதிராக 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை 88 பந்துகளில் இலக்கை எட்ட வைத்தார். கடைசியில் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

ஆடம் சாம்பா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியோடு ஆஸ்திரேலிய புள்ளிப் பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. நாளை தர்மசலா மைதானத்தில் நெதர்லாந்து அணியும் தென் ஆப்பிரிக்க அணியும் விளையாடுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories