பல மொழிகளில் கவிதை வாசித்து பாரதிக்கு ஒரு கவிதாஞ்சலி!

bharathiar - 2026

பாரதியார் பிறந்த நாளன்று நடைபெற்ற பன்மொழி புலவர் சபையில், மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கவிதைகளை வாசித்து, பாரதியின் பல மொழி ஒருமைப்பாட்டு சிந்தனைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மகாகவிக்கு அஞ்சலி

  • ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்

இந்திய அரசு நம் பாட்டரசன் சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாளை ‘பாரதிய பாஷா திவஸ்’ (இந்திய மொழி தினமாக) கொண்டாடி வருகிறது. பல மொழிகளை அறிந்த முண்டாசு கட்டிய கவிஞனின் பிறந்த நாளை இந்திய மொழி தினமாக கொண்டாடுவது சாலச் சிறந்ததாக உள்ளது.

பிற மொழிகளில் உள்ள நல்ல விஷயங்கள், நல்ல ஆசிரியர்களின் படைப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும். தமிழிலும் நல்ல நூல்களை இயற்ற வேண்டும் என்ற பாரதியின் கூற்றிலிருந்தே அவர் பல மொழிகளில் ஆர்வம் கொண்டவராகவும், பிற மொழிகளையும் மதிப்பவராகவும் விளங்கினார் என்று அறிய முடிகிறது.

நாம் நம் பாரதியைப் பற்றியோ அவர்தம் கவிதைகளை சபைகளில் வாசிக்கும் போதோ சபையினர் அவருக்கும் கொடுக்கும் மரியாதையை பார்க்கும் போது ஒரு தமிழச்சியாக எனக்கு ஒரு செருக்கு வருகிறது என்பதே உண்மை.

உதாரணமாக, ஹைதராபாத் நகரத்தில் இருந்து இயங்கி வரும் காவிய காமுதி அகில உலக பன்மொழிப் புலவர்கள் குழுமத்தினால் ஒவ்வொரு மாதமும் ‘ஆன்லைனில்’ புலவர்கள் சபை நடத்தப்பட்டு வருகிறது.

நான் 30 மாதங்களாக அந்நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளேன். தமிழில் என் கவிதையை அதில் வாசித்து வந்துள்ளேன். கடந்த வருடம், பாரதியின் பிறந்த நாளன்று பன்மொழி புலவர்கள் சபை நடத்தப்பட்டது. ஆங்கிலம் தவிர வேறு மொழியில் கவிதையை வாசிப்பவர்கள், அவர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தோ அல்லது கவிதைகளின் சாரத்தையோ ஆங்கிலத்தில் விளக்குவர்.

பாரதியின் பிறந்த நாளன்று நடந்த நிகழ்ச்சியில் நான் பாரதியாரால் மனிதனின் கடமையாய் கூறப்பட்டுள்ள ‘பிறர் துயர் தீர்த்தல்’ மற்றும் ‘பிறர் நலம் வேண்டுதல்’ – இந்த இரண்டு பண்புகளையும் எடுத்துக் கூறினேன்.

இந்த இரண்டு பண்புகளும் எக்காலத்திற்கும் ஏற்றமுடையதாய் இருப்பதனாலும், பூமியைப் போன்றே பாரதியும் பாகுபாடு பார்ப்பதில்லை என்று கூறி, அவரது வழியில் நடப்பதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் என்று கூறினேன்.

பின்னர் பின்வரும் என் கவிதையை பன்மொழிப் புலவர்களின் முன்னால் வாசித்தேன்.

“பாரில் பிறந்தோர் யாவருக்கும் பாங்காய் சொந்தமான பூமியாம்;
பூமியோ பார்ப்பதில்லை
பாகுபாடு, பாரதியோ தூற்றுகிறார் பாகுபாட்டை;
பாகுபாடற்ற சமுதாயத்திலே விளையுமாம் பிறர்நலம் வேண்டும் பண்பே;
பண்பை பின்பற்றி செல்கையிலே பிறர்துயர் தீர்த்தலும் பழகிடுமாம்;
பழகிய விதையின் பழங்களாக பண்பட்ட சந்ததியும் பிறந்திடுமாம்;
பிறப்பின் பெருமையை உணர்ந்தே பாரதிக்கு பெருமை சேர்ப்போமே;
சேர்ந்தே நாமும் பாரதிக்கு செழுமையாய் அஞ்சலி செலுத்துவோமே!!”.

இந்நிகழ்ச்சியில் மலையாளத்தின் புலவரே சிறப்பு விருந்தினராய் இருந்ததால் அவர் என் கவிதையை ரசித்து பாராட்டினார். அந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட பலரும் நம் மகாகவியின் புகழினை அறிந்திருந்ததை என் கவிதைக்கு அவர்கள் வழங்கிய பாராட்டிலிருந்து அறிய முடிந்தது. அன்று, அதுவே நம் பாரதிக்கு அளித்த அஞ்சலியாக என்னால் உணரப்பட்டது.

மொழிகளுக்கு அப்பாற்பட்டு மனங்களில் இன்றும் வாழும் மாமனிதன், மகாகவி அவன்!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories