வீழ்ந்த கம்யூனிசத்தின் அடையாளம்; திரிபுராவில் அகற்றப்பட்ட லெனின் சிலை!

திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தோல்விக்கு அடையாளமாக, அங்கே பெலோனியா நகரில் இருந்த லெனின் சிலையை உள்ளூர் பாஜக.,வினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர்.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக அடக்கியாண்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை, இந்தத் தேர்தலில் வீழ்த்தியது பாஜக., ஐபிஎப்டி கூட்டணி. திரிபுராவில் பாஜக., போட்டியிட்ட 51 தொகுதிகளில் 35 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது. கூட்டணிக் கட்சி 8 இடங்களில் வென்றது. திரிபுராவில் இதற்கு முன்னர் ஒரு கௌன்சிலர் கூட இல்லாத நிலையில் இருந்தது பாஜக., இப்போது 35 சட்டமன்றத் தொகுதிகளையே தூக்கிக்கொடுத்துள்ளனர் திரிபுரா மக்கள். இந்த வெற்றியை மாநில பாஜக.,வினர் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இதற்கிடையில் பாஜக., தொண்டர்களுக்கும் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்த லெனின் சிலை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது .

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

 

‘பாஜக., மண்ணில் லெனின் சிலை எதற்கு’ என்று சமூக வலைத்தளங்களில் சிலை அகற்றப் பட்டதற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர். ‘இதுதான் பாஜக.,-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகம்’ என்று கண்டனங்கள் குவிந்துள்ளன.

இதனிடையே பாஜக., தேசிய செயலாளர் எச். ராஜா தனது சமூகப் பக்கத்தில் ‘திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, ஹெச்.ராஜா, வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை என்றும், அது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குப்பைகள் அகற்றப் படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று லெனின் சிலையை அங்குள்ளவர்கள் அகற்றியிருக்கிறார்கள்…

 

ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்ட லெனின் சிலை திரிபுராவில் இடதுசாரிகளின் 21 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும் விதமாக கடந்த 2013ம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்படி வைக்கப்பட்ட லெனின் சிலையை பாஜக.,வினர் அகற்றும்போது பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டனர். சிலையை நாங்கள் அகற்றவில்லை; இடதுசாரிகளால் அடக்கி வைக்கப்பட்ட மக்கள் அகற்றினர் என்றனர் பாஜக.,வினர். இதனிடையே ஜேசிபி இயந்திரத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories