தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளார் ரஜினி: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் நேற்று எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த இடத்தை நிரப்பவே நான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன் என்றும் எம்.ஜி.ஆரைப் போல ஒருவரும் ஆக முடியாது என்றும் ஆனால் தன்னால் எம்ஜிஆரின் சிறந்த ஆட்சியை மக்களுக்கு கொடுக்க முடியும் என்றும் கூறினார். மேலும் தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது என்றும், தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் என்றும் தமிழன் உலக அளவில் வளர வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் நல்ல அறிவு வேண்டும் என்றும் கூறினார்

ரஜினியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரியாக்கையாளர்கள் முன் கூறியதாவது; ’நாங்கள் வீட்டில் தமிழில் பேச சொல்கிறோம். அம்மா அப்பா என அழைக்கச் சொல்கிறோம்.ஆனால் ரஜினிகாந்த் டாடி, மம்மி என சொல்லச் சொல்கிறார். தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது என்ற ரஜினியின் உரையை தமிழ் அறிஞர்கள், தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆங்கிலம் நமது இணைப்பு மொழியாக இருப்பதால் அதனை கற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது என்ற அறிய கண்டுபிடிப்பின் மூலம் தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தவராக ரஜினி இருக்கிறார்.

எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருகிறேன் எனக்கூறி அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்த எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள். எவ்வளவுதான் உயர பறந்தாலும் குருவி குருவிதான். பருந்து பருந்துதான். அதிமுக உயரப் பறக்கும், பருந்து. ஊர்க் குருவிக்கெல்லாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அரசியலுக்கு வருபவர்கள் எதாவது ஒரு குற்றச்சாட்டுகளைச் சொல்லத்தான் செய்வார்கள். இவ்வாறு ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories