January 25, 2025, 7:49 AM
23.2 C
Chennai

ஒரே அக்கவுன்டில் 2 பேர் UPI பயன்படுத்தலாம்; விரைவில் அறிமுகமாகிறது!

ஒரே அக்கவுன்டில் 2 பேர் UPI பயன்படுத்தலாம் – விரைவில் அறிமுகமாகிறது.

இது குறித்து ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், யு.பி.ஐ., வாயிலாக வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு, 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வரி செலுத்துவோர் வேலை சுலபமாகும்.

யு.பி.ஐ., பரிவர்த்தனைகளில் மற்றொரு பெரிய மாற்றமும் அறிமுகமாகிறது. ஒருவர் தன் வங்கி கணக்கில் இருந்து, தன் குடும்ப உறுப்பினர் ஒருவரை பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம்.

குறிப்பிட்ட தொகை வரை அவர் பரிவர்த்தனை செய்யலாம். அவருக்கு யு.பி.ஐ., உடன் இணைக்கப்பட்ட தனி வங்கி கணக்கு தேவையில்லை. இதன் முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கடன் வழங்கும் நிறுவனங்கள், சி.ஐ.சி., எனப்படும் கடன் தகவல் நிறுவனங்களுக்கு தரவுகளை அளிப்பதற்கான அவகாசம், ஒரு மாதத்தில் இருந்து இரு வாரங்களாக குறைக்கப்படுகிறது.

தங்களது கடன் விபரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக புதுப்பிக்கப்படுவதால், கடன் வாங்குவோர் பயனடைவர். கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனாளிகள் குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்க உதவும். இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.

ALSO READ:  ‘இஸ்ரோ’வின் புதிய தலைவராக, தமிழகத்தின் வி.நாராயணன்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!