December 5, 2025, 12:16 PM
26.9 C
Chennai

தேசமே முதன்மை – என்ற உணர்வுடன் செயல்படும் அரசு: பிரதமர் மோடி உரை!

pm modi ind speech - 2025
#image_title

தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அவரது உரை!

78ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. அவரது உரையில் குறிப்பிட்ட முக்கியமான சில குறிப்புகள்….

நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர்.

நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.

பேரிடர்களில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தேசமே துணை நிற்கிறது

செங்கோட்டை முதல் கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டம் மூலம் குறுகிய காலத்தில் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

2.50 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

2040க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல 140 கோடி மக்களின் கனவு.

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக நாட்டு மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

நமது பல்வேறு திட்டங்களின் மூலம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பயனடைந்துள்ளனர்- பிரதமர் மோடி.

இந்திய நீதித்துறையில் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

நீதித்துறைக்கு வலிமை சேர்க்க மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.

சிறப்பான சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். இதனால் வங்கித்துறை மேலும் வலிமை அடைந்துள்ளது.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணைநிற்போம்.

இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்க வேண்டும்.

உலகளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற புகழை இந்தியா விரைவில் அடையும்

“ஒரே தேர்தல் – ஆதரவு தாருங்கள்”

“தொடர் தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடை கற்களாக அமைகிறது”

“மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது”

“எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தாலும் அது தேர்தலோடு தொடர்பு படுத்தப்படுகிறது”

“ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை அடைய தேசம் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்”

“பொது சிவில் சட்டம் – அமல்படுத்தும் தருணம்”

“பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இது”

“மதம் சார்ந்த சிவில் சட்டத்திலிருந்து மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை நோக்கி மாற வேண்டிய தருணம் இது”

“புதிய சட்டதிட்டங்கள்”

“ஏழைத் தாய்மார்களின் கண்ணீரை துடைக்கும் திட்டம் உஜ்வாலா”

“3ஆம் பாலினத்தவருக்கு அதிகாரம் அளிக்கவும் மரியாதை அளிக்கவும் புதிய சட்டம்”

“நீதி வழங்கும் அமைப்பை துரிதப்படுத்த புதிய குற்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது”

“பழைய சட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்”

“உலகின் சிறந்த வங்கிகளில் இந்திய வங்கிகள்”

“நாட்டை வலிமையாக்க மாற்றங்களை கொண்டு வருகிறோம்”

“மாற்றங்கள் அரசியலுக்கானது அல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்கானது”

“வங்கி துறையில் செய்த மாற்றங்களால் உலகின் சிறந்த வங்கிகளில் இந்திய வங்கிகள் இடம்பெறுகின்றன”

“இன்று அரசின் திட்டங்கள், பயனாளிகளின் வீடுகளுக்கே செல்கிறது”

“விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா”

“விண்வெளித் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்களை நாம் கொண்டு வந்துள்ளோம்”

“விண்வெளி துறையை துடிப்பு கொண்டதாக நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்”

“தனியார் துறை செயற்கைக்கோள்கள் ஏவப்படுவது, நமக்கு பெருமையான விஷயம்”

“விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறுவதற்கான ஆலோசனைகளை மக்கள் வழங்கியுள்ளனர்”

“அதிகளவிலான செயற்கை கோள்களை இந்தியா விண்ணில் ஏவி வருகிறது”

“திறன்பெற்ற இளைஞர்களை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை சிலர் வழங்கியுள்ளனர்”

 வங்கித் துறை இன்று வலுவாக்கப்பட்டுள்ளது உலகின் தலைசிறந்த வங்கிகள் மத்தியில் பாரத வங்கிகள் இடம்பிடித்துள்ளன. மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு கடனுதவி கிடைக்கிறது.

 கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் ரயில், சாலை, துறைமுகம், விமானம் என உள்கட்டமைப்பு பணி நடந்துள்ளது.

 தேவையற்ற 1500 சட்டங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை அளித்தோம். குடிமக்களுக்கு தண்டனையல்ல, நீதி கிடைக்க, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தினோம்.

 உலகின் மிகப் பெரிய கம்பெனிகள் பாரதத்தில் முதலீடு செய்ய ஆசைப் படுகின்றன. இது பொன்னான வாய்ப்பு. உரிய தொழிற் கொள்கை, நல்லாட்சி, சீரான சட்டம் ஒழுங்கு சூழ்நிலை உருவாக்கி மாநில அரசுகள் அதிகபட்ச முதலீட்டை ஈர்க்க போட்டி போட்டு முயற்சி செய்ய வேண்டும்.

 தேசத்தின் இளம் செயற்கை நுண்ணறிவு / அனிமேஷன் வல்லுநர்கள் உலக கேமிங் சந்தையில் வலுவான இடம் பிடிக்க வேண்டும்.

 சுற்றுச்சூழல் குறித்த உலகின் கவலையை போக்கும் விதத்தில் நாம் பேச்சால் அல்ல, செயல்பட்டு உலகை ஆற்றுப்படுத்தியிருக்கிறோம், ஆச்சரியப்படுத்தியும் இருக்கிறோம்.

 பாரத தேசம் உலக நன்மைக்கான தேசம். உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எத்தனை சவால்கள் வந்தாலும் சவால்களுக்கு சவால் விடும் ஹிந்துஸ்தானம் இது. எமது 1000 ஆண்டுக்கால கலாச்சாரத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

 ஊழலுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடிக்கும். ஊழல் வாதிகள் மனதில் பயத்தை ஏற்படுத்துவோம்.

 ஒரு தொடக்கமாக, அரசியல் தொடர்பே இல்லாத குடும்பங்களிலிருந்து 1,00,000 இளைஞர்களை மக்கள் பிரதிநிதிகளாக முன்னிறுத்த இருக்கிறோம். புதியவர்கள் வரவால் புதிய எண்ணங்கள் வரும் ,புதிய வல்லமை உருவாகும்.

 மாதம் தோறும் தேர்தல் நடக்கும் இன்றைய சூழ்நிலையில் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இது பற்றி விவாதித்து குழு அறிக்கை தந்துள்ளது. ஒரு தேசம் ஒரே தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள தேசம் முன்வர வேண்டும்.

 ஆண்டு 2047 வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவு மெய்ப்படுவதற்காக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள நாங்கள், மும்மடங்கு நேரம் தந்து பணியாற்றுவோம், மும்மடங்கு வீச்சுடன் செயல்படுவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories