December 5, 2025, 12:41 PM
26.9 C
Chennai

ஐந்து நாள் கொண்டாடப்படும் அட்டகாசமான தீபாவளி!

diwali in ayodhya - 2025
#image_title

“தீபாவளி ஆசீர்வாதங்கள் “

  • குருஜி கோபாலவல்லிதாசர்

தீப ஆவளி. தீபங்களின் வரிசை. பகவான் ஜோதி ஸ்வரூபமாக இருக்கிறான். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து பகவானை வசீகரிப்பது தான் இந்தக் கொண்டாட்டம்.

தீபாவளி – ஐந்து நாட்களாகக் கொண்டாடுவது வழக்கம்.

முதல் நாள்: தனத் திரயோதசி. தன்வந்திரி திரயோதசி. ஆரோக்கியத்துக்காக. எது தனம்? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (தனம்). எனவே, இந்த தீபாவளியிலிருந்து, ஏதேனும் ஒரு உடற்பயிற்சி ஆரம்பிக்க சங்கல்பம் செய்யவும். தன்வந்திரி பகவான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்ல ஆரொக்கியத்தைத் தரட்டும். தன்வந்திரி பகவான் தான் அமிர்த கலசத்தை எடுத்து வந்த பகவான் விஷ்ணுவின் அவதாரம். அந்தக் காலத்தில் இந்த தன்வந்திரி திரயோதசி அன்று தான் லேகியம் செய்து பூஜை செய்து அதை ஏற்றுக் கொள்வது வழக்கம். தன்தேரஸ்!

இரண்டாம் நாள்: நரக சதுர்தசி. பகவான் கிருஷ்ணன் சத்தியபாமா தேவியோடு சென்று நரகனை வதம் செய்து 16 ஆயிரத்து நூறு கன்னிகைகளை விடுவித்த நாள் நரக சதுர்தசி. பெண்களுக்கு விடுதலை கொடுக்கும் நாள் தீபாவளி. வடக்கே இதை சோட்டி தீபாவளி என்பார்கள்.

மூன்றாம் நாள்: அமாவாசை. பகவான் ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி 14 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய வனவாசம் முடித்து அயோத்தி வந்த நாள். கேதார்நாத் பகவானை கௌரி அடைந்த நாள் – கௌரி அர்தாங்கினியாக சிவபெருமானின் பாதி உடலை தன்னுடைய பாகமாக வாங்கி உமையொருபாகனாகிய நாள். லக்ஷ்மி அனுக்கிரகிக்கும் நாள்.

நான்காம் நாள்: பலி பத்யாமி. மஹாபலிச் சக்ரவர்த்தி பாதாள லோகத்திலிருந்து வரக்கூடிய நாள். இதே நாள் தான் இந்திரனின் கர்வத்தை அடக்க கிருஷ்ணர் இந்திர பூஜையைக் கெடுத்த்து கோவர்தன பூஜை செய்த நாள்.

ஐந்தாம் நாள்: பாய் தூஜ் என்கிற யம த்விதியை. யம ராஜன் – யமுனா சகோதர சகோதரிகள். இன்று யாரெல்லாம் யமுனா தேவியை ஸ்மரிக்கிறார்களோ, யாரெல்லாம் யமுனைத்துறைவனான கண்ணனை ஸ்மரிக்கிறார்களோ அவர்களுக்கு யம ராஜனாலும், யமுனா தேவியின் இன்னொரு சகோதரனான சனைஷ்ச்சரனாலும் (சனீஸ்வரன்) எந்த விதமான கஷ்டங்களும் வராது.

தீபாவளியை ஆனந்தத்தோடு கொண்டாடி மகிழுங்கள். தீபாவளி ஆசீர்வாதங்கள். மூன்று வாரங்கள் இமய மலையிருந்து அக்டோபர் 27 தான் கீழே வந்தேன். இமய மலையில் எனக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்ததோ, என்ன அனுக்கிரஹங்கள் கிடைத்ததோ, அவை எல்லாம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும் பகவான் சாட்சியாகக் கொடுக்கிறேன். எல்லோரும் சந்தோஷமாக இருங்கள். ராதே கிருஷ்ணா

– Gurujee Gopalavallidasar

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories