இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 02.11.2024, இரண்டாவது நாள்

Published:

ind vs nz test series - 2026
#image_title

இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 02.11.2024, இரண்டாவது நாள்

முனைவர்கு.வை.பாலசுப்பிரமனியன்

நியூசிலாந்து(முதல் இன்னிங்க்ஸ் 65.4 ஓவர்களில் 235, டேரில் மிட்சல் 82, வில் யங் 71, டாம் லேதம்28, கிளன் பிலிப்ஸ் 17, ஜதேஜா 5/65, வாஷிங்க்டன் சுந்தர் 4/81; இரண்டாவது இன்னிங்க்ஸ்43.3 ஓவர்களில் 171/9, வில் யங் 51, கிளன் பிலிப்ஸ் 26, தேவன் கான்வே 22, ஜதேஜா4/52, அஷ்வின் 3/63) இந்திய அணி (முதல் இன்னிங்க்ஸ் 59.4 ஓவர்களில் 86/4, ஷுப்மன் கில்90, ரிஷப் பந்த் 60, வாஷிங்க்டன் சுந்தர் 38, ஜெய்ஸ்வால் 30, ரோஹித் ஷர்மா 18, அஜாஸ்படேல் 5/103) நியூசிலாந்து அணி 143 ரன் கள் முன்னிலையில் இருக்கிறது.

          இரண்டாம் நாளான இன்று, நாலு விக்கட் இழப்பிற்கு86 ரன் என்ற நிலையில் ஷுப்மன் கில் 31 ரன்னோடும் ரிஷப் பந்த் ஒரு ரன்னோடும்ஆடவந்தனர். முதல் ஓவரிலேயே பந்த் மூன்று ஃபோர் அடித்து அவரது மனநிலையைக் காட்டினார்.சுழல் பந்து வீச்சாளர்களை அடித்து ஆடியும், வேகப்பட்ந்து வீச்சாளர்களைத் தடுத்து ஆடியும்கில்லும் பந்தும் ரன் சேர்த்தனர். பந்த் 60 ரன் சேர்த்திருந்த நிலையில் இஷ் சோதியின்சுழல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

          ஸ்பைடர் கேமிராவில் ஏதோ பிரச்சனை ஏர்பட்டதால்ஆட்டம் உணவு இடைவேளைக்காக சற்று முன்னதாக நிறுத்தப்பட்டது. அச்சமயம் ஜதேஜா 10 ரன்னுடனும்கில் 70 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 195 ரன்எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பின்னர் ஜதேஜா 14 ரன்னிற்கு ஆட்டமிழந்தார்.சர்ஃப்ராஸ் கான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள்எவரும் சரியாக ஆடவில்லை. வாஷிங்க்டன் சுந்தர் மட்டும் 4 ஃபோர், 2 சிஸ்க்சர்களுடன்38 ரன் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை 263 ரன்னுக்குக் கொண்டுவந்தார். இந்திய 28 ரன்முன்னிலையில் இருந்தது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

          நியூசிலாந்தின் இரண்டாவ்து இன்னிங்க்சில்டாம் லேதம் 1 ரன்னுக்கு ஆகாஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வாஷிங்க்டன்சுந்தர் 1 விக்கட், அஷ்வின் 3 விக்கட்டுகள், ஜதேஜா 4 விக்கட்டுகள்என எடுத்து ஆட்டநேர இறுதியில் நியூசிலாந்து அணி 9 விக்கட்டு இழப்பிற்கு 171 ரன் எடுத்திருந்தது.

          நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலையில்உள்ளது. இன்னமும் ஒரு விக்கட் கையில் உள்ளது. இன்னமும் மூன்று நாட்கள் ஆட்டம் உள்ளது.அதிக பட்சம் 160 ரன் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்படலாம். இந்திய அணியின் மட்டையாளர்கள்அதனை எடுப்பார்களா? வெற்றியா? தோல்வியா? நாளை வரை காத்திருங்கள்.

 

Related articles

Recent articles

spot_img