
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது.
அதன் மூன்றாவது பகுதி..
வினா – நீங்கள் கூறியது போல இந்தச் சிறுவன் கண்ட கனவுகளில் ஒன்று இன்று உங்களோடு உரையாடுவது தான். இது நிஜமா என்று என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். 17 வயதிலே மிக சுவாரசியமான ஒரு விஷயம் நடந்தது. நீங்கள் வீட்டைத் துறந்து ஈராண்டுகள் வரை இமயமலையில் சஞ்சாரம் செய்தீர்கள். காரணத்தை அறியவும் நிலையான சத்தியத்தைத் தேடியும் கடவுளை நாடியும் சென்றீர்கள். உங்கள் வாழ்வின் இந்தக் காலகட்டம் பற்றி அதிகம் தெரியவில்லை. மிக குறைந்த தேவைகளோடு நீங்கள் வாழ்ந்து வந்தீர்கள், ஒரு யோகியைப் போல. பல நேரம் தலைக்கு மேலே கூரை கூட இருக்கவில்லை. அந்தக் காலகட்ட த்தின் நினைவில் கொள்ளத்தக்க ஆன்மீக அனுபவங்கள் என்னவாக இருந்தன என்று கூறுங்களேன்!!
மோதிஜி – கடினமாக நீங்கள் உழைத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. பாருங்கள், நான் இந்த விஷயம் தொடர்பாக அதிகம் பேசுவதில்லை என்றாலும், சில புற விஷயங்கள் குறித்துக் கண்டிப்பாக நான் பகிருகிறேன். அப்போது நான், ஒரு சிறிய இட த்தில் வசித்து வந்தேன். எங்களுடைய வாழ்க்கை சமூகமயமானதொரு வாழ்க்கை தான்.
ஏனென்றால்…. மக்களுக்கு மத்தியிலே வாழ்வது சமூகப்பாங்கான வாழ்க்கை. கிராமத்தில் இருந்த ஒரு நூலகம் செல்வது அங்கே புத்தகங்களைப் படிப்பது. அந்தப் புத்தகங்களை நான் படிக்கும் போது, எனக்கு என்ன தோன்றும் என்றால் நான் என் வாழ்க்கையை, நானும் ஏன் அப்படி பயிலக்கூடாது அப்படிச் செய்யலாமே!! நான் ஸ்வாமி விவேகானந்தர் பற்றிப் படிக்கும் போதும், சத்ரபதி சிவாஜி மகராஜ் பற்றிப் படிக்கும் போதும், இப்படி எப்படி வாழ்ந்தார்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள் என்று தோன்றும்!!!
இதற்காக நானுமே கூட என்னிடம், பல சோதனைகளை மேற்கொண்டேன், என்னிடத்தில். இந்தச் சோதனைகளின் நிலை பற்றிச் சொல்ல வேண்டுமானால் இவை, உடலோடு தொடர்புடையனவாக இருந்தன. பொதுவாக, எங்கள் ஊரில் அதிக குளிர் இருக்காது. ஆனால் டிசம்பர் மாதத்தில், சில சமயம் குளிரும். இருந்தாலும் கூட, இரவிலே, அப்போது, இயல்பாக சற்றுக் குளிரத்தான் செய்யும்.
சில சமயம் நான் தீர்மானம் செய்வேன், இன்று நான் திறந்தவெளியிலே, உறங்குவேன் என்று. உடலைப் போர்த்திக் கொள்ள, எந்தப் போர்வையையும் பயன்படுத்த மாட்டேன். குளிர் என்ன செய்கிறது என்று பார்த்து விடுவோமே!! சில வேளைகளில் என் சிறிய வயதிலே இப்படிப்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறேன்.
இப்படி பல பரிசோதனைகளைச் செய்திருக்கிறேன். அடுத்து, என்னைப் பொறுத்தமட்டில், நூலகம் செல்வது… பல புத்தகங்கள் படிப்பது, குளக்கரைக்குச் செல்வது, குடும்பத்தாரின் துணிமணிகளைத் துவைப்பது, இதோடு நீச்சல் பயிற்சியும் நடக்கும் இது ஒருவகையிலே உடல்பயிற்சியாகவும் இருந்தது. இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம்…. என் வாழ்க்கையோடு இணைந்திருந்தன. இதற்குப் பிறகு நான் (செருமல்) விவேகானந்தரைப் பற்றிப் படிக்கையில் நான் மேலும் கவரப்பட்டேன்.
ஒருமுறை ஸ்வாமிஜி பற்றிப் படிக்கையில், அவர் தாயார் நோய்வாய்ப் பட்டிருந்தார், அப்போது, இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்றார், அவரோடு சண்டை போடுவார் விவாதங்களில் ஈடுபடுவார். தன்னுடைய தொடக்ககட்ட நாட்களில். அவர் எத்தனை…. சக்தியைப் பயன்படுத்த முடியுமோ பயன்படுத்தினார். என் தாய் நோயில் படுத்திருக்கிறார் நான் சம்பாதித்துக் கொண்டிருந்தேன் இன்று என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார். என்னை ஏன் பிடுங்குகிறாய் என்றார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். காளி அன்னை அங்கே இருக்கிறாள். அன்னை காளி இருக்கிறாள். உனக்கு என்ன தேவையோ அவளிடம் பெற்றுக் கொள் என்றார்.
விவேகானந்தர் சென்றார், காளி தேவியின் விக்கிரஹம் முன்பு சென்று, மணிக்கணக்காய் அமர்ந்து, சாதனையில் ஈடுபட்டார். அமர்ந்தபடியே இருந்தார். பல மணிநேரம் கழித்துத் திரும்பி வந்தார். கேட்டாயா என்று வினவினார் பரமஹம்சர். உன் தாயிடம் கேட்டு விட்டாயா? இல்லை என்றார்…. கேட்கவில்லை என்றார். அப்படியென்றால் பாதகமில்லை நாளை மறுபடி கேள் என்றார். உன் வேலையை அம்மா செய்து கொடுப்பாள் அவளிடமே கேள். இரண்டாவது நாள் மூன்றாவது நாளும் சென்றார்.
அப்போது தான், அவர் கவனித்தார், என்னால் ஏன் எதையும் கேட்க முடியவில்லை? என் தாயின் உடல்நிலை சரியில்லை எனக்குத் தேவை இருக்கிறது. நான் தாயின் முன்பாக அமர்ந்திருக்கிறேன் அவளிடம், என்னை இழந்திருக்கிறேன். அனால் என்னால் தாயிடம் எதையும் கேட்கவே முடியவில்லையே!! வெறும் கைகளோடு த்ரும்ப வருகிறேனே!! நான் எதையும் கேட்கவில்லை என்று ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் கூற வேண்டியிருக்கிறது.
தேவியிடம் சென்று எதையும் வேண்ட முடியாமல் இருப்பது, அந்த ஒருவிஷயம் அவருடைய மனதிற்குள்ளேயொரு, சுடரை ஏற்றியது. அவர் வாழ்க்கையில் அதுவொரு தீப்பொறியானது. அதிலிருந்து தான், அளித்தல் உணர்வு பிறந்தது. என் கருத்துப்படி இது ஒருவேளை, விவேகானந்தரின் வாழ்வின் இந்த, சின்ன சம்பவம் என் வாழ்க்கையை மிகவும் ஆழமாகத் தொட்டது.
அதாவது உலகிற்கு எதை அளித்தால், என் மனதில் சந்தோஷம் பிறக்கும். உலகிலிருந்து பெற என்னிடம் தாகத்தின் வறட்சியே இருக்கும். என் மனம் தேடத் தொடங்கியது. சிவன் – சீவன் இரண்டின் ஒருமை என்றால் என்ன? சிவனுக்கு சேவை செய்வது என்றால் சீவனின் சேவையில் ஈடுபடு. சிவன் – சீவன் இரண்டிடம் இருக்கும் ஒருமையை அனுபவித்து உணர். மெய்யான அத்துவைதத்தை இதில் தான் வாழ முடியும்.
இப்படிப்பட்ட உணர்வுகளை என் மனம் கடைந்து கொண்டிருந்தது. பிறகு இந்தச் சிந்தனை என் மனதை ஆக்ரமிக்கத் தொடங்கியது. எனக்கு ஒரு சம்பவம் நினைவிருக்கிறது. நாங்கள் வசித்துவந்த பகுதியில், அதன் வெளியே ஒரு, மகாதேவருடைய ஒரு… ஆலயம் இருந்தது. அங்கே ஒரு புனிதர் வந்தார். அந்தப் புனிதர் ஒருவகை, சாதனையில் ஈடுபட்டிருந்தார் நானுமே அவரிடம் சற்று கவரப்பட்டிருந்தேன் இவரிடம், ஏதோ ஆன்மீக சக்தி இருக்கலாம் என்று கருதினேன்.
ஏனென்றால் விவேகானந்தர் பற்றி படித்திருந்தேன் ஆனால் அவரை பார்த்ததில்லை. இப்படிப்பட்டவர்களைத் தான் காண முடிந்தது. அவர்…. நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்திருந்தார். அவர் தன்னுடைய கரங்களிலே, எங்கள் ஊரில் ஜவேரா என்று அழைப்பார்கள் பயிர் செய்வோம், இந்த ஒருவகைப் புல்லை கைகளில் இப்படி வைத்து உறங்குவது. 9ஆவது நாள் வரை. இப்படி ஒரு விரதம் உண்டு. அந்த மகாத்மா இவ்வாறு செய்து வந்தார். அந்த நாட்களில் தான் என்னுடைய, மாமாவின் குடும்பத்திலே என் சித்திகளில் ஒருவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. என் குடும்பம் முழுவதும் மாமாவின் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு. மாமாவின் வீட்டிற்குச் செல்வது என்பது எந்தக் குழந்தைக்கும் சந்தோஷமான விஷயம் தான். நான் இங்கே தான் இருப்பேன் நான் வரமாட்டேன் என்று என் வீட்டாரிடம் கூறி விட்டேன். நான் இந்த சுவாமிஜியின் சேவையில் ஈடுபடுவேன். இவர் கைகளில் இதை வைத்திருப்பதால் உண்ணவோ அருந்தவோ முடியாது நான் உதவுவேன் என்றேன்.
அந்தச் சிறுவயதில் நான் திருமணத்திற்குச் செல்லவில்லை இவரோடு இருந்தேன். அந்த சுவாமிஜியின் சேவையில் ஈடுபட்டிருந்தேன். இந்தத் திசையில் தான் என் மனம் ஈடுபட்டிருந்தது. சில சமயம் இராணுவத்தில் பணிபுரிபவர்கள் என், ஊரைச் சேர்ந்தவர்கள் விடுமுறையில் வந்தால், சீருடை அணிந்து அவர்கள் செல்லும் போது, நாள் முழுக்க நானும் அவர்கள் பின்னாலே சுற்றிச்சுற்றி வருவேன். அட தேச சேவையில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்று!! ஆனால் ஒன்று, எனக்காக அல்ல ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அதிகப் புரிதல் இல்லை. எந்தச் செயல்திட்டமும் கிடையாது. பசி இருந்தது அதாவது இந்த, வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள அடையாளம் காண.
இப்படித் தான் நான் வெளிப்பட்டேன், கிளம்பி விட்டேன். அங்கே ராமகிருஷ்ண மிஷனோடு எனக்கு, தொடர்பு ஏற்பட்டு அங்கே இருந்த துறவிகள் என்னை மிகவும் நேசித்தார்கள் ஆசியளித்தார்கள். ஸ்வாமி ஆத்மஸ்தானந்தாஜியுடன் என் நெருக்கம் அதிகமானது. அவர் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார். அவருடைய வாழ்வின் கடைசித் தருணங்களில்…. என்னுடைய ஆசை என்னவென்றால், பிரதமர் இல்லத்தில் அவர் வசிக்க வேண்டும் என்பது தான். பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார். அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது. அவர் தான் எனக்கு வழிகாட்டினார், நீ ஏன் இங்கே வர நினைக்கிறாய், நீ செய்ய வேண்டிய வேலை வேறிடத்திலே. உன்னுடைய நலன் உனக்கு முதன்மையா அல்லது சமூக நலன் முதன்மையா? விவேகானந்தர் கூறியதெல்லாம் சமூக நன்மைக்குத் தானே? நீ சேவை புரியவே படைக்கப்பட்டிருக்கிறாய்.
நான், ஒருவகையிலே, அப்போது ஏமாற்றமடைந்தேன், உபதேசம் கிடைத்ததே தவிர உதவி கிடைக்கவில்லை. பிறாகு நான் என் பாதையில் பயணித்தேன், பல இடங்களில், இமயமலைப் பகுதிகளில் திரிந்தேன், நிறைய அனுபவம், அடைந்தேன், பார்த்தேன், பலவகையான அனுபவங்களை, பெற முடிந்தது பல மனிதர்களோடு, பெரிய தவசீலர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என் மனம் ஒரு நிலையில் நிலைபெறவில்லை. வயதும் இளவயது அதிக தாகம் இருந்தது. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பு இருந்தது. ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது, அங்கிருக்கும் சூழல் வேறானது மலைகளின்….. பனிமூடிய சூழலில் வசிக்க வேண்டியிருந்தது. ஆனால் அனைத்தும் என்னை உறுதிப்படுத்த உதவிகரமாக இருந்தன. எனக்குள்ளே இருந்த வல்லமை, இது எனக்கு பலத்தை அளித்தது.
சாதனையில்…. ஈடுபடுவது, விடியும் முன்பாக எழுவது நீராடுவது, மக்கள் சேவையில் ஈடுபடுவது, இயல்பாகவே, மூத்த துறவிகள் இருந்தார்கள் தவசீலர்களுக்கு சேவை புரிவது. ஒருமுறை அங்கே…. இயற்கைப் பேரிடர் ஏற்பட்டது. நான் பல கிராமவாசிகளின்…. சேவையில் ஈடுபட்டேன். இந்த இந்த புனிதர்கள் துறவிகள், இவர்களருகே நான் வசித்த போது, பெரும்பகுதி ஒரே இட த்திலே நான் தங்குவது கிடையாது, நான் திரிந்து கொண்டே இருந்தேன். இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தேன்.
வினா – இராமகிருஷ்ண மடத்தின் சுவாமி ஆத்மஸ்தானந்தா தான் மோதிஜியின் ஆதர்சம் என்பது பற்றித் தெரியாதவர்களுக்கு, அவர் தான் பிரதமரை சேவைப்பாதையில் ஈடுபடுத்தினார். அந்த வகையில் வாழ்க்கையின் வேறு ஒரு சாத்தியக்கூறும் இருந்திருக்கலாம், அதிலே சன்னியாஸம் மேற்கொண்டு, அனைத்தையும் துறந்து நீங்கள் ஒரு துறவி ஆகியிருக்கக் கூடும். ஆக துறாவி நரேந்திர மோதி ஒரு வாய்ப்பு, பிரதமர் நரேந்திர மோதி இன்னொரு வாய்ப்பு. அவர் தான் சேவைப் பாதையை நீங்கள் தேர்ந்தெடுக்க உதவினார்.
மோதிஜி – அதாவது பாருங்கள், புறப்பார்வையால் பார்த்தால் என்ன தோன்றும் என்றால், என்னை தலைவர் என்றோ பிரதமர் என்றோ முதல்வர் என்றோ மக்கள் அழைக்கலாம். ஆனால் எனக்குள்ளே வாழ்க்கை, அது சீராக இருந்தது. சிறுவயதிலே தாய், குழந்தைகளுக்கு…. மருத்துவம் பார்த்தது, அந்த வேளையில் குழந்தைகளை கவனித்துக் கொண்ட, மோதி, இயமத்தில் திரிந்து கொண்டிருந்த மோதி, அல்லது இன்று, இந்த இடத்திலே அமர்ந்து கொண்டு, பணியாற்றும் மோதி.
இவர்கள்…. அனைவரிடத்திலும் ஒரு சீரான இழை இருக்கிறது. ஒவ்வொரு கணமும் மற்றவர்களுக்காக மட்டும், வாழ வேண்டும். அந்த சமநோக்கு காரணமாக எனக்கு, துறவி தலைவர் இருவருக்கும் இடையே, வேறுபாடில்லை உலகின் பார்வையில் இருக்கலாம். அந்த ஆடை வேறு வாழ்க்கை வேறு, நாள்முழுக்க மொழி வேறு, இங்கே பணி வேறு. ஆனால் எனக்குள்ளே இருக்கும் தனித்தன்மை, அது என்னவோ, அதே விலகி நிற்கும் உணர்வோடு, கடமையைச் செய்கிறது.
வினா – உங்களுடைய மற்றுமொரு பக்கம் என்றால் நீங்கள் எப்போதுமே தேசத்திற்கே முதன்மை அளித்து வந்திருக்கிறீர்கள், தனிநபருக்கு அல்ல. உங்களுக்கு 8 வயதான போது நீங்கள் ஆர். எஸ். எஸ்ஸிலே இணைந்தீர்கள். இது இந்து தேசியத்தை முன்னிறுத்தும் இயக்கம். நீங்கள் இந்த அமைப்பைப் பற்றியும், இன்று நீங்கள் இருப்பதற்கு அது உங்களில் ஏற்படுத்திய தாக்கத்தையும், உங்கள் அரசியல் கருத்துக்கள் உருவாக்கத்தில் அதன் பங்குபணி பற்றியும் கூற முடியுமா?
மோதிஜி – அதாவது ஒரு விஷயம். சிறுவயதிலேயே கூட எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் இயல்பு. எனக்கு நினைவிருக்கிறது எங்கள் பகுதியிலே ஒரு, மாக்கோசி என்ற ஒருவர் பெயர் சரியாக நினைவு இல்லை சேவா தளத்தைச் சேர்ந்தவர் அவர். மக்கோசி சோனி என்பது மாதிரி பெயர் உடையவர். அவர் தன் கைகளிலே வாசிக்க கூடிய ஒரு தப்பட்டையை வைத்திருப்பார். தேசபக்திப் பாடல்களைப் பாடுவார், அவர் குரலும் அருமையாக இருக்கும். எங்கள் கிராமத்திற்கும் வருவார். பல்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகள் நடக்கும். நான் பித்துப் பிடித்தவனைப் போல அவருக்குப் பின்னே பாட்டுக் கேட்டுக் கொண்டே சென்று விடுவேன். இரவு முழுக்கவும், அவருடைய, தேசபக்திப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருப்பேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஏன் பிடித்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது.
இதைப் போலத் தான் எங்கள் பகுதியில் ஆர் எஸ் எஸ்ஸின் ஷாகா நடந்து வந்தது. ஷாகாவில் விளையாட்டுக்களோடு தேசபக்திப் பாடல்கள் பாடுவோம். அது மனதுக்கு இதமாக இருக்கும் மனதுக்கு அது பெரும் உற்சாகத்தை அளிக்கும். இப்படித் தான் நாங்கள் சங்கத்தில் இணைந்தோம். சங்கத்தின் கலாச்சாரம் எங்களைத் தொட்டது. என்னவென்றால், என்ன நினைத்தாலும் என்ன செய்தாலும், எதைப் படித்தாலும் கூட நிறைய படிக்க வேண்டும் அது தேசத்திற்கு உதவிகரமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொண்டாலும் அதிகம் செய்து அது தேசத்திற்கு உதவிகரமாக இருக்க வேண்டும். இதைத் தான் அங்கே தொடர்ந்து கற்பித்து வந்தார்கள். சங்கம் அது மிகப்பெரிய ஒரு அமைப்பு. மேலும், அது தனது நூற்றாண்டை இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது.
அதோடு உலகத்திலே இத்தனை பெரிய, ஸ்வயம்சேவக அமைப்பு, இருப்பதாக நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. கோடிக்கணக்கான மக்கள் இதோடு இணைந்திருக்கிறார்கள். ஆனால் சங்கத்தினைப் புரிந்து கொள்வது அத்தனை எளிதானது இல்லை. சங்கத்தின் பணிகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். மேலும் சங்கம், தன்னைத் தானே, ஒரு, வாழ்கையின் குறிக்கோள் என்போம் இல்லையா, இது தொடர்பாக, ஒரு நல்ல வழியைக் காட்டுகிறது. இரண்டாவதாக தேசமே அனைத்தும் ஆகும். மேலும் மக்கள் சேவையே மகேசன் சேவை. இதைத் தான் எங்களுடைய, வேதகாலத்திலிருந்து கூறுவது எங்கள் ரிஷிகள் கூறியது ஸ்வாமி விவேகானந்தர் கூறியது, இதைத் தான் சங்கத்தவர்கள் கூறுகிறார்கள். ஸ்வயம்சேவகர்களிடம் கூறுவதெல்லாம், சங்கத்திலிருந்து நீங்கள் கற்ற பாடங்களை, ஒரு மணிநேரம் ஷாகாவில் இருப்பது அல்ல சீருடை அணிவது மட்டுமல்ல, நீங்கள் சமூகத்துக்காக உங்கள் பங்களிப்பை அளிக்கவேண்டும் இந்த உத்வேகத்தால், இன்று ஏராளமான பணிகள் எடுத்துக்காட்டாக, சில ஸ்வயம்சேவகர்கள் சேவாபாரதி என்ற சுயவுதவி அமைப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்த சேவாபாரதி ஏழைகள் வசிக்கும் பகுதிகள் அவர்களின் குடிசைப் பகுதிகள், இதனை அவர்கள் சேவா பஸ்தி என்கிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில் கூறுகிறேன், கிட்டத்தட்ட ஒண்ணேகால் இலட்சம், சேவை மையங்களை நடத்துகிறார்கள். எந்தவொரு அரசின் உதவியேதும் இல்லாமல், சமூகத்தின் உதவியோடு, அங்கே செல்வது குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது, அவர்கள் உடல்நலம் பற்றி அக்கறை போன்று பணியாற்றுகிறார்கள். நற்பண்புகளை சொல்லித் தருவது. அந்தப் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளுதல். நீங்களே பாருங்கள் ஒண்ணேகால் இலட்சம் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல. அதே போல சில ஸ்வயம்சேவகர்கள், சங்கத்தில் பயிற்சி பெற்றவர்கள், அவர்கள் வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்தை நடத்துகிறார்கள்.
அவர்கள் காடுகளிலே வனம்வாழ் மக்களோடு மக்களாக வாழ்ந்து, வனவாசி மக்களின் சேவையில் இப்படி 70000க்கும் மேற்பட்ட, ஏகல் வித்யாலயாக்கள் ஓராசிரியர் பள்ளிகளை நடத்தி வருகின்றார்கள். மேலும் அமெரிக்காவிலும் சிலர் இருக்கிறார்கள், இவர்கள் பழங்குடிக்ளுக்காக, 10-15 டாலர்கள் நன்கொடை அளிக்கிறார்கள், இந்தப் பணிக்காக. அவர்கள் சொல்கிறார்கள், ஒரு மாதம் ஒரு கோகோ கோலா குடிக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு கோகோகோலா குடிக்காமல், அந்தப் பணத்தை, ஓராசிரியர் பள்ளிக்குத் தருவோம். இப்படி 70000 ஓராசிரியர் பள்ளிகளை பழங்குடியினக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். சில ஸ்வயம்சேவகர்கள், கல்வித் துறையில் மாற்றம் உண்டாக்க வித்யா பாரதி அமைப்பை ஏற்படுத்தி, சுமார் 25,000, பள்ளிகளை நடத்துகிறார்கள், தேசத்திலே. 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் நான் கருதுகிறேன் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு, மிகக் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கப்படுகிறது. நற்பண்புகளுக்கும் முதன்மை அளிக்கப்படுகிறது. களப்பணி அனுபவம் உள்ளவர்களால். திறன் மேம்பாட்டில் கவனம். சமூகத்துக்கு சுமையாக இருக்க கூடாது.
அதாவது…… வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும், அவர்கள் பெண்களாகட்டும் இளைஞர்களாகட்டும், தொழிலாளிகள் ஆகட்டும். ஒருவேளை, உறுப்பினர் அடிப்படையில் கூறவேண்டும் என்றால், பாரதீய மஸ்தூர் சங்கம், அதற்கு சுமார்…. 55000 சங்கக் கிளைகள் இருக்கின்றன. மேலும் கோடிக்கணக்கானோர் அதன் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஒருவேளை உலகத்திலே, இத்தனை பெரிய தொழிலாளர் சங்கம் இருக்காது என்று நினைக்கிறேன். கற்பித்தல் எப்படி இருக்கிறது? இடதுசாரிகள் எல்லாம், தொழிலாளர் இயக்கத்துக்கு வலு சேர்த்தார்கள். தொழிலாளர் இயக்கங்களின் கோஷம் என்னவாக இருக்கிறது? Workers of the World Unite. உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேருங்கள்!! ஒரு கை பார்க்கலாம்… இதுவே உணர்வு.
ஆனால் மஸ்தூர் சங்கத்தினர் ஆர் எஸ் எஸ்ஸின் ஷாக்காக்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் என்ன கூறுகிறார்கள்? அவர்கள் கூறுகிறார்கள், தொழிலாளர்க்ளே, உலகத்தை இணையுங்கள். அவர்கள் கூறுகிறார்கள், உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!! இவர்கள் கூறுகிறார்கள் தொழிலாளர்களே, உலகை ஒன்றிணையுங்கள்!! எத்தனை பெரிய வித்தியாசம்……. வாக்கியத்தில் சொற்கள் இங்கே அங்கே மாற்றி இருந்தாலும் எத்தனை பெரிய, கருத்தியல் மாற்றம்!! சங்கத்தின் ஷாகாவிலிருந்து வெளிப்பட்ட இவர்கள், தங்கள் விருப்பம் நாட்டம் இயல்புக்கு ஏற்ப பணியாற்றும் போது, இந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் ஆற்றும் பணியைப் பார்த்தீர்களென்றால், அப்போது நீங்கள், 100 ஆண்டுகளில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கமானது, பாரதத்தின், பகட்டுநிறைந்த உலகிலிருந்து விலகியிருந்து, ஒரு சாதகனைப் போல, அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்கள். இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.
செம்மையான வாழ்க்கை எனக்குக் கிடைத்தது. மேலும் என்னுடைய நற்பேறு என்னவென்றால், சில காலத்துக்கு, சில நாட்கள் துறவிகளுக்கு இடையே கழிக்க முடிந்தது. அந்த வகையில் எனக்கு ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது. அமைப்பு வாயிலாக, செம்மையான வாழ்க்கை கிடைத்த்து. துறவிகள் வாயிலாக ஆன்மீக அனுபவம் வாய்த்த்து. ஸ்வாமி ஆத்மஸ்தானாந்ந்த் போன்றவர்கள் வாழ்க்கை முழுக்க என் கைபிடித்து அழைத்துச் சென்றார்கள். ஒவ்வொரு கணமும் எனக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். ஆக இராமகிருஷ்ண மிஷன், ஸ்வாமி விவேகானந்தர், அவர்களின் வழிகாட்டுதல்கள், சங்கத்தின், சேவையுணர்வு. இவையனைத்துமே என்னை உருவாக்குவதில், மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கின்றன.