மார்ச் 15ல் அண்ணா அறிவாலயத்தில் திமுக., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்!

m k stalin dmk - 2026

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முன்பு காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  மகளிர் தினம் பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பாக உஷாவின் உயிர் பறிக்கப்பட்டது என்றால், மகளிர் தினம் நிறைவடைந்த மறுநாள் மாணவி அசுவினியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

அசுவினி கொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படும் சூழல் உருவாகாமல், உரிய நேரத்தில் கடும் நடவடிக்கைகளை எடுத்து, பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தின் பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் இன்றைக்கு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே காவலர்கள் மத்தியில் பெருகி வரும் தற்கொலைகளை தடுக்க, குறை தீர்ப்பு முகாம்களை பயனுள்ள வகையில் நடத்திட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம், அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நடைபெறும் விருந்தில் பங்கேற்குமாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் தில்லியில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இரவு விருந்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories