December 5, 2025, 2:40 PM
26.9 C
Chennai

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் – 27.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை vs லக்னோ

மும்பை இந்தியன்ஸ் அணி (215/7, ரியன் ரிக்கிள்டன் 58, சூர்யகுமார் யாதவ் 54, நமன் திர் 25, கோர்பின் போஷ் 20, ரோஹித் ஷர்மா 12, மயாங்க் யாதவ் 2/40, ஆவேஷ் கான் 2/42, பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரத்தி, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (161, ஆயுஷ் பதோனி 35, மிட்சல் மார்ஷ் 34, நிக்கோலஸ் பூரன் 27, டேவிட் மில்லர் 24, ரவி பிஷ்னோய் 13, பும்ரா 4/22, போல்ட் 3/20, வில் ஜேக்ஸ் 2/18, கோர்பின் போஷ் 1/26) 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர், கடந்த இரண்டு ஆட்டங்களாகச் சிறப்பாக ஆடிய, ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 12 ரன, 2 சிக்சர்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரியன் ரிக்கிள்டன் (32 பந்துகளில் 58 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.

அவருடன் வில் ஜேக்ஸ் (21 பந்துகளில் 29 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (28 பந்துகளில் 54 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். திலக் வர்மா (6 ரன்) மாற்றும் ஹார்திக் பாண்ட்யா (5 ரன்) இருவரும் இன்று சோபிக்கவில்லை.

பின்னால் வந்த நமன் திர் (11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் கோர்பின் போஷ் (10 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) வேகமாக ரன் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஏழு விக்கட்டு இழப்பிற்கு 215 ரன் எடுத்தது.

வெற்றிக்கு 216 ரன் என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய லக்னோ அணி மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, போல்ட் இருவரின் வேகப் பந்துவீச்சிலும் வில் ஜேக்ஸின் சுழலிலும் திணறியது.

வழக்கமாக அதிக ரன் எடுக்கும் வீரர்கள் அதிக பட்சமாக 35 ரன்னைத் தாண்டவில்லை. மிட்சல் மார்ஷ் (34 ரன்), நிக்கோலஸ் பூரன் (27 ரன்), ஆயுஷ் பதோனி (35 ரன்), டேவிட் மில்லர் (24 ரன்) ஆகியோர் வெற்றி இலக்கை அடையும் வகையில் வேகமாக ஆடமுடியவில்லை.

16ஆவது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா டேவிட் மில்லர், அப்துல் சமத் (2 ரன்), ஆவேஷ் கான் (பூஜ்யம் ரன்) ஆகிய மூவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 161 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

எனவே மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மும்பை அணியின் வில் ஜேக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

டெல்லி vs பெங்களூரு

டெல்லி கேபிடல்ஸ் அணியை (162/8, கே.எல். ராகுல் 41, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34, அபிஷேக் போரல் 28, டியு பிளேசிஸ் 22, அக்சர் படேல் 15, விப்ராஜ் நிகம் 12, புவனேஷ் குமார் 3/33, ஹேசல்வுட் 2/36, யஷ் தயாள் 1/42, க்ருணால் பாண்ட்யா 1/28) ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (18.3 ஓவர்களில் 165/4, க்ருணால் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 73, விராட் கொலி 51, அக்சர் படேல் 2/19, சமீரா 1/24) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

தொடக்க வீரர்கள் அபிஷேக் போரல் (11 பந்துகளில் 28 ரன்) மற்றும் டியு பிளேசிஸ் (26 பந்துகளில் 22 ரன்) சுமாரான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த கருண் நாயர் (4 ரன்) இன்று சரியாக ஆடவில்லை.

அதன் பின் ஆட வந்த கே.எல். ராகுல் (39 பந்துகளில் 41 ரன், 3 ஃபோர்), அக்சர் படேல் (15 ரன்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (18 பந்துகளில் 34 ரன்) இருவருடனும் இணைந்து அனியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார்.

அதற்குப் பின்னால் வந்த வீரர்களுக்கு விளையாட அதிகம் பந்துகள் இருக்க வில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. வெற்றிக்கு 163 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய பெங்களூரு அணியின் புதிய தொடக்க ஆட்டக்காரர் ஜேக்கப் பெதெல் (6 பந்துகளில் 12 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதே ஓவரில் தேவதத் படிக்கல் (பூஜ்யம் ரன்) விக்கட்டைப் பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் ரஜத் படிதர் (6 ரன்) ரன் அவுட் ஆனார். எனவே விராட் கோலி (47 பந்துகளில் 51 ரன், 4 ஃபோர்) க்ருணால் பாண்ட்யா (47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) உடன் இணைந்து நிதானமாக ஆடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இறுதியில் டிம் டேவிட் (5 பந்துகளில் 19 ரன்) வெற்றிக்கு வழிவகுத்தார். டெல்லி அணியில் அக்சர் படேலைத் தவிர பிற பந்துவீச்சாளர்கள் சரியாகப் பந்துவீசவில்லை.

அக்சர் படேல் பந்துவீச்சாளர்களைப் பயன் படுத்திய விதமும் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.

ஆட்ட நாயகனாக க்ருணால் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் இன்று முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories