
மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே8ல் மீனாட்சி திருக்கல்யாணம்…
மதுரை சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சித்தரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 29 – சித்திரை திருவிழா கொடியேற்றம்
மே 06 – மீனாட்சி பட்டாபிஷேகம்
மே 08 – மீனாட்சி திருக்கல்யாணம்
மே 09 – மீனாட்சி திருத்தேரோட்டம்
மே 10 – கள்ளழகர் புறப்பாடு
மே 11 – கள்ளழகர் எதிர்சேவை
மே 12 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி நடைபெறும்.
மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரா பெளர்ணமி தினத்தில் நடைபெறும். இது இந்துக்களின் மிகவும் சிறப்புக்குரிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் உள்ள இந்து ஆலயங்களில் நடைபெறும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஆகும்.
அக்னி நட்சத்திரம் வெயிலுக்கே சவால் விடும் வகையில் வெகு சிறப்பாக நடைபெறும் இவ்விழா சைவ-வைணவ ஒற்றுமையின் வெளிப்பாடாக கொண்டாடப்படும் உத்ஸவம் ஆகும்.
16 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இவ்விழாவில் மிக முக்கியமான நிகழ்வுகள் என்றால், அது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமே. தற்போது இதற்கு ஈடாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணமும் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கடந்த பல ஆண்டுகளாக பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை திருவிழா நடைபெறும் காலங்களில் மதுரை மட்டும் இல்லாது சுற்றி உள்ள ஊர்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். மதுரை மட்டுமின்றி அதன் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்தும் தமிழகம் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரை அனைத்து மாதங்களும் திருவிழா மாதங்கள் என்றாலும் சித்திரை திருவிழா, வழக்கமான உற்சவங்கள், திருவிழாக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
இதில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த நாளில் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் நேரடியாக சென்று திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் அதே சமயத்தில் திருமணமான பெண்கள் பலரும் புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொள்வார்கள். இப்படி மாற்றுவதால் அன்னை மீனாட்சியே போலவே தங்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மதுரையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், உலகின் பல நாடுகளிலும் இருக்கும் பெண்கள் டிவி.,யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் திருக்கல்யாண காட்சியை தரிசித்து, தாலிச்சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 29 – சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக துவங்கி திருவிழா க்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
முக்கிய நிகழ்வாக மே 06 – மீனாட்சி பட்டாபிஷேகம்
மே 08 – மீனாட்சி திருக்கல்யாணம்
மே 09 – மீனாட்சி திருத்தேரோட்டம்
மே 10 – கள்ளழகர் புறப்பாடு
மே 11 – கள்ளழகர் எதிர்சேவை
மே 12 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் நடைபெறும்.
கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக மதுரைக்கு வருவது விழாவின் முக்கிய அம்சம். அதே போல் சித்திரைத் திருவிழாவின் போது பதினாகாவது மற்றும் இறுதி நாளில் தேவேந்திர பூஜை நடத்தப்படும். இது மண் செழிப்பதற்காக நடத்தப்படும் மிக அற்புதமான பூஜை. கள்ளழகர், அழகர்மலை சென்றடைவதுடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறும்.




