நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சசிகலாவுக்கு பரோல் மறுப்பு!

sasikala - 2026

சென்னை: ம.நடராஜன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, அவர் அனுமதிக்கப் பட்டிருக்கும் குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இன்று பரோலுக்கு விண்ணப்பித்த சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத் துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குளோபல் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து நடராஜனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டிருப்பதாக நடராஜனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது கணவர் நடராஜனைப் பார்க்க வேண்டும் என்று கூறி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, சிறைத்துறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அவரது பரோல் விண்ணப்பத்தை சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்து விட்டது. அண்மையில்தான் இதே காரணத்தை ஒட்டி பரோல் வழங்கப்பட்டது என்றும், இந்த நிலையில் மீண்டும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் உயிரிழப்புகள் நேரும்போது கலந்து கொள்ள மட்டுமே பரோல் அளிக்க இயலும் என்றும் சிறைத்துறை பதிலளித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைஇ சிகிச்சை செய்யப்பட்ட போது, அவரை உடன் இருந்து கவனிக்க வேண்டும் என்று கூறி பரோலுக்கு விண்ணப்பித்தார் சசிகலா. அவருக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories