December 5, 2025, 3:12 PM
27.9 C
Chennai

நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சசிகலாவுக்கு பரோல் மறுப்பு!

sasikala - 2025

சென்னை: ம.நடராஜன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, அவர் அனுமதிக்கப் பட்டிருக்கும் குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இன்று பரோலுக்கு விண்ணப்பித்த சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத் துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குளோபல் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து நடராஜனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டிருப்பதாக நடராஜனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது கணவர் நடராஜனைப் பார்க்க வேண்டும் என்று கூறி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, சிறைத்துறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அவரது பரோல் விண்ணப்பத்தை சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்து விட்டது. அண்மையில்தான் இதே காரணத்தை ஒட்டி பரோல் வழங்கப்பட்டது என்றும், இந்த நிலையில் மீண்டும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் உயிரிழப்புகள் நேரும்போது கலந்து கொள்ள மட்டுமே பரோல் அளிக்க இயலும் என்றும் சிறைத்துறை பதிலளித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைஇ சிகிச்சை செய்யப்பட்ட போது, அவரை உடன் இருந்து கவனிக்க வேண்டும் என்று கூறி பரோலுக்கு விண்ணப்பித்தார் சசிகலா. அவருக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories