நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சசிகலாவுக்கு பரோல் மறுப்பு!

sasikala - 2026

சென்னை: ம.நடராஜன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, அவர் அனுமதிக்கப் பட்டிருக்கும் குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இன்று பரோலுக்கு விண்ணப்பித்த சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத் துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குளோபல் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து நடராஜனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டிருப்பதாக நடராஜனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது கணவர் நடராஜனைப் பார்க்க வேண்டும் என்று கூறி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, சிறைத்துறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அவரது பரோல் விண்ணப்பத்தை சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்து விட்டது. அண்மையில்தான் இதே காரணத்தை ஒட்டி பரோல் வழங்கப்பட்டது என்றும், இந்த நிலையில் மீண்டும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் உயிரிழப்புகள் நேரும்போது கலந்து கொள்ள மட்டுமே பரோல் அளிக்க இயலும் என்றும் சிறைத்துறை பதிலளித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைஇ சிகிச்சை செய்யப்பட்ட போது, அவரை உடன் இருந்து கவனிக்க வேண்டும் என்று கூறி பரோலுக்கு விண்ணப்பித்தார் சசிகலா. அவருக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories