நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சசிகலாவுக்கு பரோல் மறுப்பு!

sasikala - 2026

சென்னை: ம.நடராஜன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, அவர் அனுமதிக்கப் பட்டிருக்கும் குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இன்று பரோலுக்கு விண்ணப்பித்த சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத் துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குளோபல் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து நடராஜனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டிருப்பதாக நடராஜனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது கணவர் நடராஜனைப் பார்க்க வேண்டும் என்று கூறி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, சிறைத்துறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அவரது பரோல் விண்ணப்பத்தை சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்து விட்டது. அண்மையில்தான் இதே காரணத்தை ஒட்டி பரோல் வழங்கப்பட்டது என்றும், இந்த நிலையில் மீண்டும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் உயிரிழப்புகள் நேரும்போது கலந்து கொள்ள மட்டுமே பரோல் அளிக்க இயலும் என்றும் சிறைத்துறை பதிலளித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைஇ சிகிச்சை செய்யப்பட்ட போது, அவரை உடன் இருந்து கவனிக்க வேண்டும் என்று கூறி பரோலுக்கு விண்ணப்பித்தார் சசிகலா. அவருக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories