அதுக்கும் இதுக்கும் தொடர்பில்லை: தெளிவாக இருக்கும் அதிமுக.,வினர்!

thambidurai - 2026

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பி.,க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக., ஆதரிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், காவிரி விவகாரத்திற்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவையில் பதில் அளித்துள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக., ஆதரிக்க வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்து குறித்துப் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கும் எந்தத் தொடர்பு கிடையாது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக மார்ச் 29ஆம் நாளுக்குப் பின் அனைவரும் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக., ஆதரிக்க வேண்டும் என்கிறார் ஸ்டாலின். ஆனால் அதற்கு ஓபிஎஸ்., இதற்கும் காவிரிக்கும் சம்பந்தமில்லை என்கிறார். இதே நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவாக்கியிருக்கிறார் தம்பித்துரை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விட மாட்டோம் எனக் கூறியுள்ளார் மக்களவைத் துணைத்தலைவர் தம்பிதுரை.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். இப் பிரச்னைக்காக கடந்த 11 நாட்களாக போராடி வருகிறோம். நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் செய்து வருகிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விட மாட்டோம். காவிரி பிரச்னையையும், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தையும் தொடர்புபடுத்தி பார்க்க கூடாது. எங்கள் போராட்டம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை… என்று கூறினார்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

ஆனால், மத்திய அரசின் தூண்டுதலிலேயே அதிமுக., இவ்வாறு நடந்துகொள்வதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories