காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

mahatma gandhi - 2026

புது தில்லி: மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு நம் நாடு சுதந்திரம் பெற முக்கியக் காரண கர்த்தராக விளங்கியவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆனால் நாடு சுதந்திரம் அடையும் போது தேசப் பிரிவினையை ஆமோதித்தார் என்றும், நாட்டில் ஹிந்துக்கள் பெருமளவில் இஸ்லாமியர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட போது ஹிந்துக்களை சகித்துக் கொள்ளச் சொன்னார் என்றும் கூறி, 1948 ஜன.30ல் காந்தியை தீவிர ஹிந்து மதப் பற்றாளரான நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, 1949ல் அவர்களுக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. மேலும், இத்துடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காந்தியின் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கைக்கும், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கிற்கும் பெரும் வேறுபாடு இருப்பதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த பங்கஜ் பட்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ‘காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிப்பதுடன் கோட்சே, ஆப்தே தவிர வேறு எவரேனும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளனரா என தீர விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு, ஓர் ஆய்வுக் கட்டுரை அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories