தங்கம் வென்ற சதீஷ் குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

commonwealth gold - 2026
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 4 வது தங்கம் | 85கிலோ பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் வெங்கட் ராகுல் ரகாலா…

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஒரே நாளில் தமிழக வீரர் சதீஷ்குமார் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இருவர் பளு தூக்கும் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாளான சனிக்கிழமையன்று 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டி நடந்தது. இதில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ் குமார், கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த்திலும் தங்கம் வென்றவர். 2016ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்கவும் தகுதி பெற்றவர் சதீஷ் குமார். காமன்வெல்த் போட்டியில் சதீஷ் குமார் தங்கம் வென்றதை அடுத்து ஊர் மக்களுக்கு அவரது பெற்றோர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

காமன் வெல்த் போட்டியில், 85 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்கும் போட்டியில் இந்தியரான வெங்கட் ராகுல் ரகாலா (Venkat Rahul Ragala) என்பவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் 4-ஆம் இடம் பிடித்துள்ளது.

 

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பளுதூக்கும் வீரர்களால் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேருவதாக தெரிவித்துள்ளார். தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கும், வெங்கட் ராகுல் ரகாலாவுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

sathish kumar sivalingam - 2026

 


இதனிடையே, தங்கப்பதக்கம் வென்ற சதீஷ் குமாருக்கு 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சதீஷ் குமாரின் சாதனையால் இந்தியாவும், தமிழகமும் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் சதீஷ் குமாரை வாழ்த்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories