December 5, 2025, 8:24 PM
26.7 C
Chennai

நள்ளிரவில் ராகுல் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ‘ போதை தள்ளாட்ட’ பேரணி! செல்ஃபி எடுத்தவர்களை சீறிய பிரியங்கா!

priyanka vadra - 2025

காஷ்மீர், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து, தில்லியில் நேற்று நள்ளிரவு பேரணி நடத்தினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் தலைமையில் நடந்த பேரணியில் பிரியங்காவும் கலந்து கொண்டார். அப்போது செல்பி எடுக்க முயன்றவர்களிடம் பிரியங்கா கடுமையாகப் பேசினார்.

உபி.,யில் உன்னாவ் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண்ணை பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜன.10ஆம் தேதி 8வயதுச் சிறுமி ஆசிஃபாவை மர்மநபர்கள் கடத்தி பலாத்காரம் செய்து கொன்றனர். இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்த இரு சம்பவங்களுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தில்லியில் நேற்று நள்ளிரவு காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடந்தது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து தில்லி இந்தியா கேட் வரையில் நடந்த பேரணியில் ராகுல் தலைமை தாங்கினார். சோனியா, பிரியங்கா , ராபர்ட் வத்ரா, அவரின் 15வயது மகள், காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

இந்த அமைதிப் பேரணியின் போது சிலர் பிரியங்காவுடனும் ராகுல் காந்தியுடனும் செல்ஃபி எடுக்க முயன்றனர். இதனால் பிரியங்கா கடுப்பானார். கடுங் கோபத்தில் செல்ஃபி எடுக்க முயன்றவர்களை சத்தம் போட்டு சீறினார். ‘நாம் எதற்காக இங்கே கூடி இருக்கிறோம், என்ன காரணத்துக்காக கூடி இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு இப்படி ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டும், சத்தம் போட்டுக் கொண்டும் இருக்கிறீர்களே.. நீங்கள் வீட்டுக்குச் சென்றுவிடுங்கள். இது செல்ஃபி எடுக்கும் நேரமா என சிந்தியுங்கள். எதற்காக இந்த பேரணி என்பதை உணர்ந்து செயல்படுங்கள்’ எனக் கத்தித் தீர்த்தார். அவர் இவ்வாறு கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்த ஊடகத்தினர் சிலர், வழக்கம் போல் பேட்டி எடுக்க முயல, அவர்களிடமும் பிரியங்கா கடுமையாக சீறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் நடத்தப்பட்ட இந்த அமைதிப் பேரணியில் பலர் மது அருந்திக் கொண்டு, சத்தம் போட்டுக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு, தள்ளாடியபடி வந்தனர். இதனால் பேரணியில் வந்த பெண்கள் அச்சமடைந்து பாதுகாப்பின்மையை உணர்ந்தனர். பிரியங்கா கோபப் பட்டதற்குக் காரணம் இதுதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களிடம் சமாதானம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories