பூனை மேல் மதில் போல ஸ்டாலின் போராட்டம்: ஹெச்.ராஜா கிண்டல்!

Published:

h raja - 2026

சென்னை : எஸ்.சி.,எஸ்.டி., சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என ஸ்டாலின் பேசினார்.

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9ல் சேர்க்க வேண்டும் என்றும் பேசினார் ஸ்டாலின்.

இதனைக் குறிப்பிட்டு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக., தேசிய செயலாளர் எச்.ராஜா, ஏற்கனவே சீராய்வு மனு போடப்பட்டுள்ளது. இதுவும் பூனை மேல் மதில் போல.

ஏற்கனவே ஸ்டாலின் மதில் மேல் பூனை என்பதற்கு பதில் பூனை மேல் மதில் என்று கூறியதை தாங்கள் கவனிக்க வில்லையா? அது மட்டுமல்ல பொன்னார் என்பதற்கு பதில் பொன்னர் சங்கர் என்றார். எடப்பாடி க்கு வாழப்பாடி என்றார் இன்னமும் பல. அவர் சொன்னதைக் குறிப்பிட்டேன் – என்று கிண்டல் அடித்துள்ளார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

அவரது டிவிட்டர் பதிவு…

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img