வாசுதேவநல்லூரில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா!

1001445760 - 2026

வாசுதேவநல்லூரில் நம்ம ஊரு மோடி’ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான பெண்கள் பொங்கல் இட்டனர்.

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் 1,008 பானைகளில் பொங்கலிடும் விழா வாசுதேவநல்லூரில் ஜன. 13ஆம் தேதி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் 1,008 பானைகளில் பொங்கலிடும் விழா வாசுதேவநல்லூரில் ஜன. 13ஆம் தேதி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் வாசுதேவநல்லூா் பழைய பேருந்து நிலையம் அருகே காலை 9 மணிக்கு ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ திருவிழா 1,008 பானைகளில் பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது

1001445761 - 2026

இவ்விழாவுக்கு ஆனந்த் அய்யாசாமி தலைமை வகித்தார்.பாஜக மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ,ஏற்பாட்டில் முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை பொங்கல் விழாவை தொடங்கிவைத்தார்.

இதில், தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த பாஜகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் அண்ணாமலை பேசியதாவது இன்றைய தினம் இந்த தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் தமிழக பாஜக தென்காசி மாவட்ட தலைவர் திரு. ஆனந்தன் அய்யாசாமி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற “நம்ம ஊரு மோடி பொங்கல்” பெருவிழாவில், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் KC திருமாறன் அவர்கள், மரியாதைக்குரிய அய்யா ஸ்ரீகுரு சிவச்சந்திரன் சுவாமிகள் அவர்கள், தமிழக பாஜக மாவட்ட நிர்வாகிகள், சகோதர சகோதரிகளுடன் இணைந்து பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

தென்காசி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான செண்பகவல்லி அணையை சீரமைப்பது உள்ளிட்ட தென்காசி மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது திமுக அரசு. அதே சமயம், புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகாரம் வழங்கியது மத்திய பாஜக அரசு.

தென்காசியில் கனிமவளங்களை கொள்ளையடித்து கேரளாவிற்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க திமுக அரசால் முடியவில்லை என்று மனமுவந்து திமுக நிர்வாகியே தனது கட்சி பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நிர்வாக தோல்வி அடைந்திருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது இந்நிலையை நாம் ஒன்றிணைந்து மாற்றி காட்டுவோம். அதற்கு வரவுள்ள தேர்தலில் தேசியவாத சிந்தனை கொண்ட தென்காசி மண்ணை சார்ந்த ஒருவரை நாம் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

சூரியனையும், பஞ்சபூதங்களையும் முன்னிறுத்தி நடத்தப்படும் பொங்கல் பெருவிழாவில் எல்லாம் வல்ல இறைவனின் அருளோடு அனைத்து உயிர்களுக்கும் நலமும், வளமும் கிடைத்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories