December 5, 2025, 4:22 AM
24.5 C
Chennai

தமிழக ஆளுநரை களங்கப்படுத்தும் ‘செயல்’களுக்கு நாக்பூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

governor banwarilal purohit - 2025நாக்பூர்: தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் ’செயல்’களுக்கு மகாராஷ்டிர உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும், நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக, நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் மகாராஷ்டிர உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் இரண்டும் சேர்ந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அடிப்படையற்ற விஷமத்தனத்துடனும் தீய நோக்கத்துடனும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாக்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஊடக வட்டாரங்களில்பல ஆண்டுகளாக, ‘பாபுஜி’ என்ற பெயரில் பன்வாரிலால் புரோஹித்தை நாங்கள் நன்கு அறிவோம்.

நல்ல கொள்கை கொண்டவர். அப்பழுக்கற்ற நேர்மையாளர். விடா முயற்சி கொண்ட மக்கள் பிரதிநிதியாக இந்தியாவின் மத்திய பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளியாகி வரும், ‘தி ஹிடாவதா’ ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக, கல்வி நிறுவனங்களின் திறமையான நிர்வாகியாக, பண்பட்ட தலைவராக விளங்கி வருபவர். தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் முன்னுதாரண மனிதராக வாழ்ந்து வருபவர்.

பெரும்பான்மையான பத்திரிகையாளர்களுக்கு ஒரு தந்தை போல வழிகாட்டி வரும் அவர், ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக எப்போதுமே குரல் கொடுத்து வருகிறார். அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பவர்.

அன்றைய தினம், ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியை தவறான கண்ணோட்டத்தில் சித்திரிக்க முயல்வது, வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் நற்பெயருடன் செயல்பட்டு வருபவரை, சட்ட பூர்வமான உயர் பதவி வகித்து வருபவரை இது சிறுமைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, மட்டமான ரசனை கொண்டதும் கூட!

‘தி இடாவதா’ நாளிதழில் ஏராளமான பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் அவரால் நடத்தப்பட்டு வரும் அனைத்து நிறுவனங்களும், சட்டத்திற்கு உட்பட்டு, பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு உகந்த இடங்களாக திகழ்ந்து வருகின்றன. எனவே, பன்வாரி லால் புரோஹித் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிக்கு எங்களின் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்… என்று அந்த கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

nagpur working journo for publish - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories