தமிழக ஆளுநரை களங்கப்படுத்தும் ‘செயல்’களுக்கு நாக்பூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

governor banwarilal purohit - 2026நாக்பூர்: தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் ’செயல்’களுக்கு மகாராஷ்டிர உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும், நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக, நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் மகாராஷ்டிர உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் இரண்டும் சேர்ந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அடிப்படையற்ற விஷமத்தனத்துடனும் தீய நோக்கத்துடனும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாக்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஊடக வட்டாரங்களில்பல ஆண்டுகளாக, ‘பாபுஜி’ என்ற பெயரில் பன்வாரிலால் புரோஹித்தை நாங்கள் நன்கு அறிவோம்.

நல்ல கொள்கை கொண்டவர். அப்பழுக்கற்ற நேர்மையாளர். விடா முயற்சி கொண்ட மக்கள் பிரதிநிதியாக இந்தியாவின் மத்திய பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளியாகி வரும், ‘தி ஹிடாவதா’ ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக, கல்வி நிறுவனங்களின் திறமையான நிர்வாகியாக, பண்பட்ட தலைவராக விளங்கி வருபவர். தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் முன்னுதாரண மனிதராக வாழ்ந்து வருபவர்.

பெரும்பான்மையான பத்திரிகையாளர்களுக்கு ஒரு தந்தை போல வழிகாட்டி வரும் அவர், ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக எப்போதுமே குரல் கொடுத்து வருகிறார். அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பவர்.

அன்றைய தினம், ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியை தவறான கண்ணோட்டத்தில் சித்திரிக்க முயல்வது, வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் நற்பெயருடன் செயல்பட்டு வருபவரை, சட்ட பூர்வமான உயர் பதவி வகித்து வருபவரை இது சிறுமைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, மட்டமான ரசனை கொண்டதும் கூட!

‘தி இடாவதா’ நாளிதழில் ஏராளமான பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் அவரால் நடத்தப்பட்டு வரும் அனைத்து நிறுவனங்களும், சட்டத்திற்கு உட்பட்டு, பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு உகந்த இடங்களாக திகழ்ந்து வருகின்றன. எனவே, பன்வாரி லால் புரோஹித் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிக்கு எங்களின் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்… என்று அந்த கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

nagpur working journo for publish - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories