தமிழக ஆளுநரை களங்கப்படுத்தும் ‘செயல்’களுக்கு நாக்பூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

governor banwarilal purohit - 2026நாக்பூர்: தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் ’செயல்’களுக்கு மகாராஷ்டிர உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும், நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக, நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் மகாராஷ்டிர உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் இரண்டும் சேர்ந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அடிப்படையற்ற விஷமத்தனத்துடனும் தீய நோக்கத்துடனும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாக்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஊடக வட்டாரங்களில்பல ஆண்டுகளாக, ‘பாபுஜி’ என்ற பெயரில் பன்வாரிலால் புரோஹித்தை நாங்கள் நன்கு அறிவோம்.

நல்ல கொள்கை கொண்டவர். அப்பழுக்கற்ற நேர்மையாளர். விடா முயற்சி கொண்ட மக்கள் பிரதிநிதியாக இந்தியாவின் மத்திய பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளியாகி வரும், ‘தி ஹிடாவதா’ ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக, கல்வி நிறுவனங்களின் திறமையான நிர்வாகியாக, பண்பட்ட தலைவராக விளங்கி வருபவர். தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் முன்னுதாரண மனிதராக வாழ்ந்து வருபவர்.

பெரும்பான்மையான பத்திரிகையாளர்களுக்கு ஒரு தந்தை போல வழிகாட்டி வரும் அவர், ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக எப்போதுமே குரல் கொடுத்து வருகிறார். அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பவர்.

அன்றைய தினம், ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியை தவறான கண்ணோட்டத்தில் சித்திரிக்க முயல்வது, வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் நற்பெயருடன் செயல்பட்டு வருபவரை, சட்ட பூர்வமான உயர் பதவி வகித்து வருபவரை இது சிறுமைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, மட்டமான ரசனை கொண்டதும் கூட!

‘தி இடாவதா’ நாளிதழில் ஏராளமான பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் அவரால் நடத்தப்பட்டு வரும் அனைத்து நிறுவனங்களும், சட்டத்திற்கு உட்பட்டு, பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு உகந்த இடங்களாக திகழ்ந்து வருகின்றன. எனவே, பன்வாரி லால் புரோஹித் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிக்கு எங்களின் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்… என்று அந்த கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

nagpur working journo for publish - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories