மரத்தில் தொங்கி சாகசம் செய்து புதுமண தம்பதியை எடுத்த ‘வைரல்’ போட்டோ!

photoclick photography kerala couple - 2026

 

மணமக்களை வித்தியாசமான முறையில் புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞருக்கு பாராட்டு குவிகிறது. அந்தப் படம் இப்போது வைரல் ஆகி வருகிறது.

கேரளாவின் திருச்சூரில் மணமக்களை மரத்தில் தொங்கியபடி நூதன முறையில் புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞரின் சாகசக் காட்சி, தற்போது அதிகளவில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

துபையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றும் சைஷ் ரோபர்ட்டுக்கும் நவ்யா ஜோஸ்க்கும் திருசூரில் கடந்த 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து,  ஆல்பத்திற்காக புகைப்படம் எடுக்கும் பணியில் போட்டோகிராபர் விஷ்ணு ஈடுபட்டார்.

அப்போது, வித்தியாசமான முறைகளில் புகைப்படம் எடுத்து அசத்தியுள்ளார். குறிப்பாக, அருகிலுள்ள மரத்தில் ஏறி, தலைகீழாக தொங்கிய படி மணமக்களை அவர் எடுத்த காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பதிவை மட்டும் இதுவரை சுமார் 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ட்விட்டரில் வைரலாகியிருக்கும் இந்த வீடியோ காட்சி பற்றி கருத்து தெரிவித்துள்ள புகைப்படக் கலைஞர் விஷ்ணு, இதற்கு முன்பாக நான்கைந்து முறை மரத்தில் ஏறி போட்டோ எடுத்திருந்தாலும், சிறந்த போட்டோவை எடுத்தது இதுவே முதல்முறை எனக் கூறியுள்ளார்.

மேலும், பறவையின் பார்வையில் இருந்து இந்த புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆர்வமே, மரத்தின் தலைகீழாக தொங்கியதற்கு காரணம் என்றும் விஷ்ணு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories