ஆராயாமல் முடிவு எடுக்க மாநிலங்களவைத் தலைவர் அலுவலகம் என்ன தபால் நிலையமா?

Venkaiah Naidu PTI - 2026

புது தில்லி: ஆராயாமல் முடிவு செய்ய மாநிலங்களவைத் தலைவர் அலுவலகம் என்ன தபால் நிலையமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு!

அரசியல் சாசன விதிமுறைகளை ஆராய்ந்து பார்த்த பின்னரே தலைமை நீதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை தள்ளுபடி செய்தேன். ஆராயாமல் முடிவு எடுக்க மாநிலங்களவைத் தலைவர் அலுவலகம் ஒன்றும் தபால் நிலையம் இல்லை என்று காட்டத்துடன் கூறியுள்ளார் வெங்கய்ய நாயுடு.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்க மாநிலங்களவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றக் கோரி, காங்கிரஸ் தலையிட்டு எதிர்க்கட்சிகள் சிலவற்றின் துணையுடன், அவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் நோட்டீஸ் கொடுத்தன. அந்த நோட்டீஸை நிராகரிப்பதாக, வெங்கய்ய நாயுடு இரு தினங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால், அவரது செயலை விமர்சித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர். குறிப்பாக கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த விவகாரத்தை மோசமான முறையில் கொண்டு சென்று, குட்டுப் பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த வெங்கய்ய நாயுடு,  தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம் தாக்கல் செய்வதற்கான காரணங்கள் குறித்து சட்ட வல்லுனர்கள், அரசியலமைப்பு நிபுணர்களுடன் ஆலோசித்தேன். அதன் பின்னரே, எதிர்க் கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. எதிர்க் கட்சிகள் கொடுக்கும் மனுவை ஆராயாமல்  அவையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, மாநிலங்களவை தலைவர் அலுவலகம் ஒன்றும் தபால் நிலையம் இல்லை என்று கூறினார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories