January 25, 2025, 12:52 AM
24.9 C
Chennai

குத்து ரம்யா மீது உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு!

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளரான நடிகை ‘குத்து’ ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா மீது உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது.

நடிகை ரம்யா தற்போது காங்கிரஸ் கட்சி சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளராக இருந்து வருகிறார்.  அண்மையில் காங்கிரஸ் உள்ளிட்ட 6 கட்சிகள் சேர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் நோட்டீஸை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அளித்தனர்.

அந்த தீர்மான நோட்டீஸ் சட்ட வல்லுநர்களின் அறிவுறுத்தல்படி வெங்கய்ய நாயுடுவால்  நிராகரிக்கப் பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி  சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரம்யா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து அவதூறுக் கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பினார். இதனை அடுத்து, வழக்கறிஞர் பருண் குமார் சின்ஹா என்பவர் ரம்யா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ALSO READ:  நெல்லை வரதராஜ பெருமாள் கோயில் பரமபத வாசல் திறப்பு ரத்து; இந்து முன்னணி கண்டனம்!

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், டிஒய் சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வில், அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுக்க மனுவில் கோரப்பட்டு இருந்தது. அதற்கு அனுமதி மறுத்த நீதிபதிகள் வழக்கமான அலுவல்படி வழக்கு விசாரணைக்கு வரும் எனத் தெரிவித்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!