January 20, 2025, 6:40 PM
26.2 C
Chennai

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் மிருகங்கள்: ஆந்திர முதல்வர்

குண்டூர் கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து பொது விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தினார்.

ஆந்திராவின் குண்டூரில் 9 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை தொடர்ந்து, விஜயவாடாவில் பொது விழிப்புணர்வு பேரணி ஒன்றை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தினார்.

சிறுமிகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்கும் நோக்கிலேயே இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, இந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் எனது கவனத்துக்கு வந்ததும், சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி குற்றம் செய்தவரை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

இதுமட்டுமின்றி, இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது மக்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் இதுபோன்ற குற்றவாளிகளிடம் கருணை காட்ட கூடாது. பெண்கள், குற்றவாளிகள் முகத்தில் காறி துப்ப வேண்டும். அவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள், அவர்களை மன்னிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தில்லி சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு; ஈரோடு கிழக்கு தொகுதிக்கும்!

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, போக்குவரத்து, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒரு குழு அமைத்து இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...