காஷ்மீர் கல்வீச்சில் உயிரிழந்த சென்னை இளைஞர் திருமணி: சிக்கியுள்ள 135 பேரை மீட்க கோரிக்கை!

kashmir thirumani - 2026காஷ்மீர் ஸ்ரீநகரில் தற்போது 135 சுற்றுலா பயணியர் இருப்பதாகவும், கல்வீச்சு காட்டுமிராண்டித் தன வன்முறைச் சம்பவங்கள் தொடர்வதால் அவர்கள் சன்ஷைன் ஹோட்டலிலேயே தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

நகரில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்வதால், சுற்றுலா பயணியர் எவரும் சன்ஷைன் ஹோட்டலை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த திருமணி என்பவர், கல்வீசிக் கலவரம் செய்யும் காட்டுமிராண்டிகளின் கல்வீச்சில் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அதிமுக எம்.பி., வேணுகோபால் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில், காஷ்மீரில் உள்ள 135 தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கல்வீச்சில் உயிரிழந்த இளைஞர் திருமணி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அங்கு சுற்றுலா சென்றுள்ள 135 பேர் பாதுகாப்பாக தமிழகம் திரும்ப தேவையான உதவிகளை தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக தமிழ்நாடு இல்ல அதிகாரிகளை, 011 – 24193100, 011 – 24193200, 011 – 24193450 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேரிக்கை விடுத்துள்ளதாகவும் முதல்வர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அவர் இது குறித்துக் குறிப்பிட்டபோது, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஏற்பட்ட வன்முறையின் போது கல்வீச்சில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி இறந்தது கண்டிக்கத்தக்கது. துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை திருமணியின் உடல் காஷ்மீரில் இருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவில் 4 பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories