காஷ்மீர் கல்வீச்சில் உயிரிழந்த சென்னை இளைஞர் திருமணி: சிக்கியுள்ள 135 பேரை மீட்க கோரிக்கை!

kashmir thirumani - 2026காஷ்மீர் ஸ்ரீநகரில் தற்போது 135 சுற்றுலா பயணியர் இருப்பதாகவும், கல்வீச்சு காட்டுமிராண்டித் தன வன்முறைச் சம்பவங்கள் தொடர்வதால் அவர்கள் சன்ஷைன் ஹோட்டலிலேயே தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

நகரில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்வதால், சுற்றுலா பயணியர் எவரும் சன்ஷைன் ஹோட்டலை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த திருமணி என்பவர், கல்வீசிக் கலவரம் செய்யும் காட்டுமிராண்டிகளின் கல்வீச்சில் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அதிமுக எம்.பி., வேணுகோபால் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில், காஷ்மீரில் உள்ள 135 தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கல்வீச்சில் உயிரிழந்த இளைஞர் திருமணி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அங்கு சுற்றுலா சென்றுள்ள 135 பேர் பாதுகாப்பாக தமிழகம் திரும்ப தேவையான உதவிகளை தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இதற்காக தமிழ்நாடு இல்ல அதிகாரிகளை, 011 – 24193100, 011 – 24193200, 011 – 24193450 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேரிக்கை விடுத்துள்ளதாகவும் முதல்வர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அவர் இது குறித்துக் குறிப்பிட்டபோது, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஏற்பட்ட வன்முறையின் போது கல்வீச்சில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி இறந்தது கண்டிக்கத்தக்கது. துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை திருமணியின் உடல் காஷ்மீரில் இருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவில் 4 பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories