இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு ஓர் இடம் இல்லியே!: மாணவனைத் திருத்திய சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டுகள்!

sushma swaraj - 2026

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவன் நான், எனக்கு பாஸ்போர்ட் கிடைக்க உதவுங்கள் என டிவிட்டரில் சுஷ்மா பெயரை டேக் செய்து உதவி கேட்ட வெளிநாடு வாழ் காஷ்மீர் மாநில மாணவருக்கு, ‘அப்படி ஓர் இடம் எங்குமே இல்லையே! நீங்கள் காஷ்மீர் மாநிலத்தவர் என்று குறிப்பிட்டு உதவிகேட்டால், செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்தார். அவரது பதிலடிக்கு, இணையத்தில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து டிவிட்டரில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தெரிவித்தால், அதற்கு அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இப்படி நிறையப் பேர் பலனடைந்துள்ளதால், சுஷ்மா ஸ்வராஜின் டிவிட்டருக்கு மதிப்பும் மவுசும் மிக அதிகம்!

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தங்கி மருத்துவம் படித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் சேயிக் அதீக், சுஷ்மாவுக்கு அனுப்பிய டிவிட்டர் கோரிக்கையில்…

sushma swaraj tweet1 - 2026

இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவன் நான். பிலிப்பைன்சின் மணிலா நகரில் மருத்துவம் படித்து வருகிறேன். என் பாஸ்போர்ட் சேதம் அடைந்துவிட்டது. புதிய பாஸ்போர்ட்டிற்காக ஒரு மாதம் முன் விண்ணப்பித்தேன். மருத்துவ பரிசோதனைக்காக உடனடியாக வீடு திரும்ப வேண்டும். எனக்கு புதிய பாஸ்போர்ட் கிடைக்க உதவி செய்யுங்கள் – என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் அனுப்பிய பதிலில், ‘இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற இடம் எங்குமே இல்லை. நீங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டு உதவி கேட்டால், நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வேன்’ எனக் கூறியிருந்தார்.

இதை அடுத்து சேயிக் அதீக் தனது டிவிட்டர் பதிவில் மீண்டும் அனுப்பிய கோரிக்கையில், தன்னை ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவன் என குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில், சேயிக் அதீக்குக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மணிலாவில் உள்ள இந்திய துாதரகத்துக்கு சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டார்.

சுஷ்மா ஸ்வராஜ் அளித்த இந்த பதிலடி பதிவு, டிவிட்டரில் மட்டுமல்ல, பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுஷ்மாவின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள். மிகச் சரியான வகையில் திருத்தியிருக்கிறீர்கள் என்று கூறி பாராட்டுதல்கள் குவிந்து வருகின்றன.

அதே நேரம், இந்த மாணவர் என்ன காரணத்தாலோ தனது கோரிக்கை டிவிட்டர் பதிவினை நீக்கியுள்ளார். ஏன் அதனை டெலிட் செய்தார் என்பது அவருக்கே உள்ள நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், அந்த மாணவரின் கோரிக்கைக்கும் சுஷ்மாவின் பதிலுக்கும் சுஷ்மாவின் அதே டிவிட்டர் பதிவில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

jk muslim student - 2026

அந்தக் கருத்துகளில் சில….

வேலை முடிவதற்காக ஜம்மு காஷ்மீர் என்று போட்டுக் கொள்வான். உதவி பெற்றதும் மீண்டும் அந்த இடத்தின் பெயரை மாற்றிக் கொள்வான்…

அது எப்படி இருந்தால் என்ன..? அது நம் இந்திய பாஸ்போர்ட்தானே..! அவனுக்கு உதவுங்கள்.

இந்தியாவின் ஓர் அங்கமாக இருப்பதை விரும்பாதவர்கள், இந்திய உதவிகளை மட்டும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்!

இந்த முட்கள் நம் உதவியை எதிர்பார்க்கும், பின் நம் முதுகிலே குத்தும்!

இதே டாக்டர் பின்னாளில் பயங்கரவாதியாக மாறி நம் ராணுவ வீரர்களைக் கொல்லப் போகிறான்

உங்களை எல்லாம் பார்த்தால் கேவலமாக இருக்கிறது

இன்னும் காந்தி காலத்திலேயே இவர்கள் வாழ்கிறார்கள்..

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதைப் பயன்படுத்தி இந்தியர்களைக் கொல்வார்கள். ஆனாலும் நாம் அவர்கள் தாங்கள் செய்யும் தவறுகள் குறித்து புரிந்துகொள்ளக் கூட வாய்ப்பு தராமல் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவோம். மனித நேயம் என்பது நமக்கு மட்டுமே போதிக்கப் படுகிறது, அவர்களுக்கு அல்ல. இத்தகையவர்களுக்கு உதவும் முன்னர், நாம் இவர்களால் கொல்லப் பட்ட ராணுவவீரர்களின் குடும்பத்தாரிடம் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்!

அந்த டிவிட்டையே டெலிட் செய்துள்ளாரே! இதில் இருந்தே தெரியவில்லையா? அவர் எதை நோக்கி இருக்கிறார் என்று!?

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

உங்கள் உதவியை அவர் எதிர்பார்த்தார். கிடைத்ததும் மீண்டும் ப்ரொஃபைலை மாற்றிக் கொள்ளப் போகிறார். இத்தகைய நன்றிகெட்டவர்களுக்கு உதவும் முன்னர் நன்றாக யோசியுங்கள்.

காஷ்மீருக்கு திரும்பி வந்த பின்னர் சுற்றுலா பயணிகள் மீதும் ராணுவத்தினர் மீதும் கல்லெறியப் போகிறான்… அவ்வளவுதானே!

இப்படி கூறியதன் மூலம் ஜம்மு காஷ்மீர், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் அப்படித்தானே!

இதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தீர்கள்.. சரி! பின் ஏன் பிபிசி ஆங்கிலம், ஹிந்தி செய்தி தளங்களில் ‘இந்திய நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீரில்’ என்று குறிப்பிடுகிறார்கள்?! அதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

bbc tweet2 horz - 2026

இந்திய அடையாளங்களுடன் வெளிநாட்டுக்குச் சென்றவர், இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளார் என்றால், அவர் தாம் இந்தியர் என்று குறிப்பிடும் அனைத்து விதமான அடையாளக் கோப்புகள் அட்டைகளையும் இந்திய அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories