March 22, 2025, 11:17 AM
30.9 C
Chennai

லாலு மகன் திருமண பந்தியில் அடிதடி ரகளை; உணவுப் பொருளை திருடிச் சென்றும் அடங்காத கூட்டம்!


  • லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ் திருமண நிகழ்ச்சியில் கடுங்கூட்டம்
  • பந்திக்கு முந்தி அடிதடி ரகளையில் ஈடுபட்ட மக்கள்
  • உணவு, உணவுப் பொருள்களை திருடிச் சென்ற விநோதம்
  • 7000 பேர் திருமணத்துக்கு எதிர்பார்க்கப் படுவதாக ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்த நிலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது

பாட்னா: லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ் – ஐஸ்வர்யா திருமண வைபவம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் பந்திக்கு முந்தி அடிதடி ரகளையில் ஈடுபட்டும், சிலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

பீஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏ., சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும், பாட்னா கால்நடை மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.இந்தத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, பரோலில் வெளியே வந்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.

கான்பூரைச் சேர்ந்த சமையல் காண்டிராக்டர், வெஜிட்டேரியன் உணவு சமைத்து வைத்திருந்தார். நகரின் மிகப்பெரும் ஹோட்டல்களில் 100க்கும் மேற்பட்ட அறைகள், திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்காக முன்பதிவு செய்யப் பட்டிருந்தது.

காலை திருமணம் முடிந்ததும் அங்கே காத்திருந்த ஆர்ஜேடி., தொண்டர்கள் என்று கருதப்படும் ஆயிரக்கணக்கான மக்கள், திருமண விருந்து உணவை உண்பதற்காக, முண்டியடித்தனர். போட்டிருந்த தடுப்புகளைக் கடந்து உள்ளே சென்றனர். விஐபி., ஊடகங்கள் என போடப்பட்டிருந்த பந்தல் பகுதிகளில் துணிகளை அகற்றி உள்ளே சென்றனர். அங்கே வைக்கப் பட்டிருந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு சிட்டாகப் பறந்தனர். இதனால் அங்கே அடிதடி ரகளை ஏற்பட்டு அந்த இடமே குழப்பமாக இருந்தது.

இந்தக் களேபரத்தில் ஊடகத்தினர் கொண்டு வந்திருந்த கேமராக்கள், விலை உயர்ந்த கருவிகள் விழுந்து உடைந்தன. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டம் கட்டுக்கடங்காமல் அங்கும் இங்கும் அல்லாடியது. இதை அடுத்து, தங்கள் பொருள்கள் சேதமானது குறித்து ஊடகத்தினர் புகார் தெரிவித்தனர்.

பந்தியில் இடம் கிடைக்காத ஆத்திரத்தில் கட்சியினர் சிலர் டேபிள், சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். இன்னும் சிலர், உணவுதான் நமக்குக் கிடைக்கவில்லை, இதையாவது எடுத்துச் செல்வோமே என்று உணவுப் பொருள்களை அள்ளிச் சென்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்த திருமண ஏற்பாட்டாளர்கள், 7 ஆயிரம் பேருக்கு தேவையான உணவு தயாரித்து வைத்திருந்தோம். ஆனால், இவ்வளவு கூட்டம் கட்டுக்கடங்காமல் வரும் என்று நாங்கள் முன்கூட்டியே கணிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.

திருமண விழாவில் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மார்ச் 21 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திருப்பரங்குன்றத்தில் திருத் தேரோட்டம் கோலாகலம்!

தேரின் முன்பாக சிறிய சட்டத் தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லாயிரக்

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மார்ச் 21 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திருப்பரங்குன்றத்தில் திருத் தேரோட்டம் கோலாகலம்!

தேரின் முன்பாக சிறிய சட்டத் தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லாயிரக்

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

Entertainment News

Popular Categories